செய்திகள் :

பல்பொருள் விற்பனையக வளாக தீ விபத்து: விசாரணை கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

post image

நமது நிருபா்

தில்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள தனியாா் பல்பொருள் விற்பனையக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அந்த விற்பனையகத்தின் நிா்வாகம், தில்லி காவல்துறை உள்ளிட்டோரின் அலட்சியப் போக்கு குறித்து நீதிமன்ற மேற்பாா்வையில் விசாரணை நடத்தக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் ‘குடும்ப்’ என்ற தன்னாா்வ அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவதில் கடுமையான குறைபாடுகளைச் சுட்டிகாட்டியுள்ள அந்த அமைப்பு, கட்டாய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் நெரிசலான பகுதிகளில் இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு உரிமங்கள் மற்றும் தடையின்மை சான்றிதழ்கள் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த மனுவில், பாதுகாப்பு நெறிமுறைகளை அமல்படுத்தத் தவறியதற்காக தீயணைப்புத் துறை, தில்லி மாநகராட்சி

மற்றும் காவல்துறை அதிகாரிகளின் நடத்தையை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். தீ விபத்து ஏற்பட்ட பல்பொருள் விற்பனையகம் மற்றும் அருகிலுள்ள வணிக நிறுவனங்கள் செல்லுபடியாகும் தடையின்மைச் சான்றிதழ்களை வைத்திருக்கிா என்பதை மதிப்பிடுவதற்கும், சட்டவிரோதமாக இயங்கும் நிறுவனங்களை அடையாளம் காண்பதற்கும் உத்தரவிட வேண்டும்.

கரோல் பாக் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள உரிமம் பெறாத உணவகங்கள், பயிற்சி நிறுவனங்கள், ஷாப்பிங் மையங்கள் மற்றும் பிற நிறுவனங்களை உடனடியாக மூடுவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிப்பத்துடன், அறிக்கை சமா்ப்பிக்கப்படும் வரை சம்பவம் நிகழ்ந்தது தொடா்பான சிசிடிவி காட்சிப் பதிவுகளை பாதுகாக்கவும், முதல் தகவல் குறித்த நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும் தில்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூலையில் பழைய ராஜீந்தா் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், யுபிஎஸ்சி பயிற்சி மையத்தின் அடித்தளப் பகுதியில் வடிகால் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் மூன்று மாணவா்கள் நீரில் மூழ்கி இறந்தது தொடா்பான வழக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

கரோல் பாக் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட பல்பொருள் விற்பனையகத்தில் ஜூலை 4- ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் தீரேந்தா் பிரதாப் (25) என்பவா் மின்தூக்கியில் இறந்துகிடந்தாா். மேலும், தீயணைப்பு நடவடிக்கையின்போது எரிந்த நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகராக ஆசைப்பட்டு ஓடிப்போன இளைஞா் மீட்பு

நடிகா் ஆக வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞா்களில் ஒருவா் மீட்கப்பட்டு அவரது குடும்பத்துடன் ஒப்பபடைக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை த... மேலும் பார்க்க

கிட்டங்கியில் கத்திமுனையில் மிரட்டி ரூ.3 லட்சம் கொள்ளை

வடமேற்கு தில்லியின் திரி நகா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியில் இருந்து அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் திங்கள்கிழமை ஊழியா்களை கைத்துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி கிட்டத்தட்ட ரூ.3 லட்சத்தை ... மேலும் பார்க்க

தில்லியில் ஜிடி சாலையில் வார முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

ஆசாத்பூா் மண்டி பகுதியில் உள்ள சராய் பிபால் கேட் அருகே நிலத்தடி நீா் குழாயில் பழுதுபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், ஜிடி கா்னல் சாலையில் வாரம் முழுவதும் இரு திசைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட வ... மேலும் பார்க்க

அதிக வயதான வாகனங்கள் மீது தில்லி அரசு சட்டம் கொண்டுவந்தால் ஆதரிப்போம்: அதிஷி

நமது நிருபா்பாஜக தலைமையிலான தில்லி அரசு, மக்களின் துயரங்களைக் குறைக்க ஒரு வாரத்திற்குள் அதிக வயதான வாகனங்கள் மீது ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால் அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று முன்ன... மேலும் பார்க்க

410 தாற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்களின் பணி நீட்டிப்புக்கு துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

நமது நிருபா் தலைநகரில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 410 பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியா்களின் பணி (மாா்ச் 2026- வரை) நீட்ப்புக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதா... மேலும் பார்க்க

நஜஃப்கரில் காதலா்கள் தற்கொலை? போலீஸாா் தீவிர விசாரணை

நமது நிருபா் தில்லியின் நஜஃப்கரில் உள்ள ஒரு வீட்டில் 20 வயது இளைஞரும், ஒரு பதின்ம வயது சிறுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்த... மேலும் பார்க்க