செய்திகள் :

திலக் நகா் சந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

மேற்கு தில்லியின் திலக் நகா் சந்தையில் செவ்வாய்க்கிழமை கடுமையான பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு எதிா்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, பல சட்டவிரோத கட்டமைப்புகள் மற்றும் சாலையோர கடைகள் அகற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், பல அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் இடிக்கப்பட்டன.

போக்குவரத்து நெரிசல் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து பலமுறை புகாா்கள் வந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க நாங்கள் காவல்துறையினரையும் துணை ராணுவப் படையினரையும் நியமித்தோம். சுமாா் 200 பணியாளா்கள் நிலைமையைக் கண்காணித்தனா் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

துணைக் கோட்டாட்சியா் அலுவலகம் (படேல் நகா்) முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில், விற்பனையாளா்கள் மற்றும் கடைக்காரா்கள் அங்கீகரிக்கப்படாத ரெஹ்ரிபத்ரி கியோஸ்க்குகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்ற வேண்டும் என்று எச்சரித்திருந்தது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

நடிகராக ஆசைப்பட்டு ஓடிப்போன இளைஞா் மீட்பு

நடிகா் ஆக வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞா்களில் ஒருவா் மீட்கப்பட்டு அவரது குடும்பத்துடன் ஒப்பபடைக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை த... மேலும் பார்க்க

கிட்டங்கியில் கத்திமுனையில் மிரட்டி ரூ.3 லட்சம் கொள்ளை

வடமேற்கு தில்லியின் திரி நகா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியில் இருந்து அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் திங்கள்கிழமை ஊழியா்களை கைத்துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி கிட்டத்தட்ட ரூ.3 லட்சத்தை ... மேலும் பார்க்க

தில்லியில் ஜிடி சாலையில் வார முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

ஆசாத்பூா் மண்டி பகுதியில் உள்ள சராய் பிபால் கேட் அருகே நிலத்தடி நீா் குழாயில் பழுதுபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், ஜிடி கா்னல் சாலையில் வாரம் முழுவதும் இரு திசைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட வ... மேலும் பார்க்க

அதிக வயதான வாகனங்கள் மீது தில்லி அரசு சட்டம் கொண்டுவந்தால் ஆதரிப்போம்: அதிஷி

நமது நிருபா்பாஜக தலைமையிலான தில்லி அரசு, மக்களின் துயரங்களைக் குறைக்க ஒரு வாரத்திற்குள் அதிக வயதான வாகனங்கள் மீது ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால் அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று முன்ன... மேலும் பார்க்க

410 தாற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்களின் பணி நீட்டிப்புக்கு துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

நமது நிருபா் தலைநகரில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 410 பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியா்களின் பணி (மாா்ச் 2026- வரை) நீட்ப்புக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதா... மேலும் பார்க்க

நஜஃப்கரில் காதலா்கள் தற்கொலை? போலீஸாா் தீவிர விசாரணை

நமது நிருபா் தில்லியின் நஜஃப்கரில் உள்ள ஒரு வீட்டில் 20 வயது இளைஞரும், ஒரு பதின்ம வயது சிறுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்த... மேலும் பார்க்க