செய்திகள் :

``2026 தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி'' - மதுரையில் பகிரங்கமாக அறிவித்த வைகோ

post image

மதுரையில் நடந்த மதுரை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செயல்வீரர் கூட்டத்தில்

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தமிழகத்தின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க இணையற்ற சேவைகளை செய்த மதிமுக, முல்லைப் பெரியாறு அணையை காப்பாற்ற உண்ணாவிரதம், மறியல் போராட்டம் என நடத்தினோம்.

போராட்டம் நடத்தி, வழக்கு தொடுத்து நானே வாதாடியதால்தான் சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என தீர்ப்பளித்தது. எங்கள் இயக்கம் தொடங்கி 31 வருடங்களாகிவிட்டது தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி வருகிறோம்.

திமுகவிற்கு பக்க பலமாக, அரவணைத்து செல்லவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இருக்கிறோம். திமுகவிற்கு சோதனையான காலத்தில் அரணாக மதிமுக உடன் இருக்கும்.

மதுவை ஒழிக்க வேண்டும் என வாய் மட்டும் பேசாமல், டாஸ்மாக் கடைகளை சூறையாடி, நெருப்பு வைத்தார்கள் எனது தோழர்கள்.

2026 தேர்தலில் திராவிட இயக்கத்தை காக்க திமுகவுடன் உடன்பாடு கொள்கிறோம். எட்டு இடங்களில் வெற்றி பெற்றால்தான் அரசு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் கூடுதலாக இடங்கள் கேட்போம்.

வைகோ

திராவிட கொள்கைக்கு மாறாக செயல்பட்டு வரும் அதிமுகவை திராவிட இயக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர் கவனமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

மனிதர்களால் இயக்கப்படும் ரயில்வே கேட்டுகளை அகற்றிவிட்டு, மின்மயமாக மாற்றி விபத்துக்களை தடுக்க வேண்டிய பொறுப்பு ரயில்வே துறைக்கும், ரயில்வே அமைச்சரத்திற்கும் உள்ளது. இரண்டு பச்சிளம் உயிர்கள் பறிபோன கடலூர் ரயில் விபத்து வேதனை அளிக்கிறது" என்றார்.

``பெண்கள் போகும்போது நான் போகக்கூடாதா என்று கேட்டார்'' - செல்வப்பெருந்தகை மீது தமிழிசை குற்றச்சாட்டு

ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடைபெற்றது.அப்போது, மூலவர் விமானத்தில் புனித நீர் ஊற்றுகையில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டது.அத... மேலும் பார்க்க

Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா?

Doctor Vikatan: நீரிழிவு உள்ளவர்கள் சாதம் சாப்பிடுவதைத்தவிர்த்து சப்பாத்தி சாப்பிடுவது சரியானதா. இன்னொரு பக்கம், சப்பாத்தி சாப்பிடுவதால்தான்அதில் உள்ள குளூட்டன் காரணமாக பலருக்கும் சர்க்கரைநோய் வருகிறத... மேலும் பார்க்க

`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்!| In Depth

``இனி சின்ராச கையிலேயே புடிக்க முடியாதுங்க..." என்று சொல்லும் அளவுக்கு தேர்தல் வந்துவிட்டால் தூங்கி வழிந்த அரசியல்வாதியிலிருந்து ஆக்ரோஷமாக அறிக்கைவிட்டுக்கொண்டிருந்த அரசியல்வாதிவரை எல்லோருக்கும் சுறுச... மேலும் பார்க்க

``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிறார்.." - சேகர்பாபு

திருப்பரங்குன்றம் கோயிலில் வருகின்ற திங்கட்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் பி.மூர்த்தி,... மேலும் பார்க்க

Andropause: ஆண்ட்ரோபாஸ்; அறிகுறிகள், வாழ்வியல் மாற்றங்கள், தீர்வுகள் என்னென்ன?

''ஆண்களுக்கு ஏற்படக்கூடிய மெனோபாஸை `ஆண்ட்ரோபாஸ்’ என்பார்கள். `ஆண்ட்ரோபாஸ்’ பற்றி அறிந்துகொள்வதற்குமுன் `டெஸ்டோஸ்டிரோன்’ (Testosterone) ஹார்மோன் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். ஆண்களின் உடலில் சுர... மேலும் பார்க்க

மும்பை: ராஜ் தாக்கரே கட்சியினர் போராட்டம்; சிவசேனா அமைச்சர் மீது தாக்குதல்.. என்ன நடந்தது?

மும்பை மீரா பயந்தர் பகுதியில் செயல்பட்டு வரும் ஜோத்பூர் ஸ்வீட்ஸ் என்ற கடையில் பணியாற்றிய ஊழியர் மராத்தி பேசாததால் அவரை மராத்தி பேசச்சொல்லி ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவினர் அடித... மேலும் பார்க்க