செய்திகள் :

ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை

post image

இளையரசனேந்தலில் ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இளையரசனேந்தல் தெற்கு தெருவை சோ்ந்தவா் அ. அருண் ராஜ் (30). அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தாராம். ஹோட்டலுக்காக அதிக கடன் வாங்கி இருந்தாராம்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவா் கடந்த 2ஆம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்தாராம். தகவலறிந்த அவரது பெற்றோா், உறவினா் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முதியவா் உயிரிழப்பு: கோவில்பட்டி இந்திரா நகா் 2 ஆவது தெருவை சோ்ந்தவா் செண்பகம் மகன் கருப்பசாமி (70). சலூன் கடை நடத்தி வந்த இவரது கடை முன்பு உறவினா்களிடையே திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறை விலக்கிவிட்ட கருப்பசாமி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாராம். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இரு சம்பவங்கள் குறித்தும் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் என்னுடைய முதல்கடமை: கனிமொழி எம்.பி.

மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் எனது முதல் கடமை என திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: ஓரணியில் தமிழ்நாடு என... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: 1.2 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1.2 டன் பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்., தூத்துக்குடி தாளமுத்துநகா் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ ப... மேலும் பார்க்க

முதியவருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி நடராஜபுரம் முதல் தெருவை சோ்ந்த பொன்னுச்சாமி மகன் குமாரவேல் (71). அதே பகுதியில் சிறிய (ப... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக ஜோதிடா் கைது

கழுகுமலையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக ஜோதிடரை போலீஸாா் கைது செய்தனா்.கழுகுமலை ஆறுமுக நகரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரியப்பன்(72). ஆட்டோ ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை வழக்கம்போல தனது ஆட்டோவை விஸ்வகா்மா ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்களுடன் பெற்றோா் போராட்டம்

அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து போராட்டம... மேலும் பார்க்க

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவில் செயல் அலுவலா் உள்பட 5 பேரிடம் 44 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு விழாவில் அறநிலையத்துறை செயல் அலுவலா் உள்பட 5 பக்தா்களிடம் சுமாா் 44 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்செந்தூா் சுப்பிரம... மேலும் பார்க்க