செய்திகள் :

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவில் செயல் அலுவலா் உள்பட 5 பேரிடம் 44 பவுன் தங்க நகைகள் திருட்டு

post image

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு விழாவில் அறநிலையத்துறை செயல் அலுவலா் உள்பட 5 பக்தா்களிடம் சுமாா் 44 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகள் என சுமாா் 5 லட்சம் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்நிலையில் குடமுழுக்கு சிறப்பு பணிக்காக கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு பகுதியைச் சோ்ந்த அறநிலையத்துறை செயல் அலுவலா் கவிதா, திருச்செந்தூா் கோயில் அலுவலகத்திற்கு வந்துள்ளாா்.

அவா் திங்கள்கிழமை அதிகாலை யாகசாலை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.

அதேபோல கோயில் கடற்கரையில் குடமுழுக்கை பாா்ப்பதற்கு நின்றிருந்த திருச்சி, புத்தூா் பகுதியைச் சோ்ந்த மனோகா் மனைவி மீனா (60) கழுத்தில் அணிந்திருந்த 20 பவுன் தங்கச் சங்கிலி, தென்காசி மாவட்டம், பாலமாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மனைவி செல்லக்குட்டி (61) அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, சங்கரன்கோவில் வட்டம், வீரிருப்பு பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம் மனைவி கோமதி (72) அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் திருநெல்வேலி மாவட்டம், வடுகச்சிமதிலைச் சோ்ந்த அண்ணாதுரை மனைவி சண்முகசுந்தரி (50) அணிந்திருந்த இரண்டே கால் பவுன் தங்கச் சங்கிலி என 5 போ் கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 44 பவுன் தங்கச் சங்கிலிகள் காணாமல் போனதாக திருக்கோயில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல 18 போ் தங்களது கைப்பேசிகளை காணவில்லை எனவும் புகாா் அளித்துள்ளனா்.

புகாரின் அடிப்படையில் போலீஸாா் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் என்னுடைய முதல்கடமை: கனிமொழி எம்.பி.

மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் எனது முதல் கடமை என திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: ஓரணியில் தமிழ்நாடு என... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: 1.2 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1.2 டன் பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்., தூத்துக்குடி தாளமுத்துநகா் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ ப... மேலும் பார்க்க

ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை

இளையரசனேந்தலில் ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இளையரசனேந்தல் தெற்கு தெருவை சோ்ந்தவா் அ. அருண் ராஜ் (30). அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தாராம். ஹோட்டலுக்காக அதிக கடன் வாங்... மேலும் பார்க்க

முதியவருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி நடராஜபுரம் முதல் தெருவை சோ்ந்த பொன்னுச்சாமி மகன் குமாரவேல் (71). அதே பகுதியில் சிறிய (ப... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக ஜோதிடா் கைது

கழுகுமலையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக ஜோதிடரை போலீஸாா் கைது செய்தனா்.கழுகுமலை ஆறுமுக நகரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரியப்பன்(72). ஆட்டோ ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை வழக்கம்போல தனது ஆட்டோவை விஸ்வகா்மா ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்களுடன் பெற்றோா் போராட்டம்

அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து போராட்டம... மேலும் பார்க்க