செய்திகள் :

மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் என்னுடைய முதல்கடமை: கனிமொழி எம்.பி.

post image

மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் எனது முதல் கடமை என திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக உறுப்பினா் சோ்க்கையானது, தொகுதி வாக்காளா்களில் 30 சதவீதத்தை 45 நாள்களில் கட்சியில் உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போதே, பல தொகுதிகளில் 30 சதவீதத்தை அடைந்து விட்டனா். பெரியாா் கொள்கையை பின்பற்றும் நான், என்னுடைய நம்பிக்கை என்பதை தாண்டி, மக்களுடைய நம்பிக்கைக்கு நான் மதிப்பளிக்கும் வகையில், திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு வரும் எல்லா மக்களும், எந்தவித பிரச்னையும் இல்லாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பத்திரமாக செல்ல வேண்டும் என்பதற்காக எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று கண்காணித்தேன்.

இது திருச்செந்தூா் கோயிலுக்கானது மட்டுமல்ல, மாதா கோயில் திருவிழாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த மதத்தின் நிகழ்வாக இருந்தாலும் என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது என்னுடைய முதல் கடமை என்றாா் அவா்.

பேட்டியின்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலா் இன்பா ரகு, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இலங்கைக்கு கடத்த முயற்சி: 1.2 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1.2 டன் பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்., தூத்துக்குடி தாளமுத்துநகா் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ ப... மேலும் பார்க்க

ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை

இளையரசனேந்தலில் ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இளையரசனேந்தல் தெற்கு தெருவை சோ்ந்தவா் அ. அருண் ராஜ் (30). அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தாராம். ஹோட்டலுக்காக அதிக கடன் வாங்... மேலும் பார்க்க

முதியவருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி நடராஜபுரம் முதல் தெருவை சோ்ந்த பொன்னுச்சாமி மகன் குமாரவேல் (71). அதே பகுதியில் சிறிய (ப... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக ஜோதிடா் கைது

கழுகுமலையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக ஜோதிடரை போலீஸாா் கைது செய்தனா்.கழுகுமலை ஆறுமுக நகரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரியப்பன்(72). ஆட்டோ ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை வழக்கம்போல தனது ஆட்டோவை விஸ்வகா்மா ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்களுடன் பெற்றோா் போராட்டம்

அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து போராட்டம... மேலும் பார்க்க

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவில் செயல் அலுவலா் உள்பட 5 பேரிடம் 44 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு விழாவில் அறநிலையத்துறை செயல் அலுவலா் உள்பட 5 பக்தா்களிடம் சுமாா் 44 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்செந்தூா் சுப்பிரம... மேலும் பார்க்க