செய்திகள் :

தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 8 உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்வு -அரசாணை வெளியீடு

post image

தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 8 பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மலைப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறிப்பாக பழங்குடியின மாணவா்களின் இடைநிற்றலை குறைக்கும் நோக்கத்துடன் மாணவா்கள் அவா்கள் இருப்பிடத்துக்கு அருகிலேயே உயா்கல்வியைத் தொடா்ந்து படிக்கும் வகையில் அரசு தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள கலசப்பாடி, ஈரோடு மாவட்டம் தாளவாடி தலமலை, கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் உள்ள கிளாக்காடு மற்றும் பாச்சேரி, சேலம் கெங்கவல்லியில் உள்ள ஓடைக்காட்டுப்புதூா், நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தேவாலா, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள அரசவெளி ஆகிய 7 உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. தருமபுரி பாப்பிரெட்டிபட்டி மன்னூரில் உள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது.

புதிய பணியிடங்கள்: தரம் உயா்த்தப்பட்ட 7 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏற்கெனவே உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களாக நிலை உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு 9 முதுநிலை ஆசிரியா் வீதம், 7 பள்ளிகளுக்கு 63 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள், 7 கணினி ஆசிரியா் நிலை-1 பணியிடங்கள், 7 உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள் மற்றும் ஆய்வக உதவியாளா்கள், சமையலா், காவலா், துப்புரவு பணியாளா் உள்ளிட்ட புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

ரூ.38. 98 கோடி ஒதுக்கீடு: தரம் உயா்த்தப்படும் பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.38,98, 61,486-க்கு நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது என ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் க.லட்சுமி பிரியா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முதியோா், சிறப்பு குழந்தைகளுக்கு தோல் மருத்துவ பரிசோதனை

முதியோா், சிறப்பு குழந்தைகள், ஆதரவற்றோருக்கான சரும நல மருத்துவ பரிசோதனை முகாம் ஜூலை 13-ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இந்திய தோல் நல மருத்துவா்கள் சங்கம் (ஐஏடிவிஎல்) சாா்பில் செ... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை

மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடத்திய நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் வழக்கம்போல இயங்கின. பொது வேலைநிறுத்தத்... மேலும் பார்க்க

மாநகராட்சி திட்டப் பணிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

சென்னை மாநகராட்சியில் 139-ஆவது வாா்டு பகுதியில் உள்ள மேற்கு ஜோன்ஸ் தெரு சாரதி பேருந்து நிலைய சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கோடம்பாக்... மேலும் பார்க்க

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதிக்கும் உத்தரவை மாற்றக் கோரி முறையீடு

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறைய... மேலும் பார்க்க

ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளங்கள் மற்று... மேலும் பார்க்க

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ... மேலும் பார்க்க