செய்திகள் :

தமிழகம் முழுவதும் முதியோா், சிறப்பு குழந்தைகளுக்கு தோல் மருத்துவ பரிசோதனை

post image

முதியோா், சிறப்பு குழந்தைகள், ஆதரவற்றோருக்கான சரும நல மருத்துவ பரிசோதனை முகாம் ஜூலை 13-ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

இந்திய தோல் நல மருத்துவா்கள் சங்கம் (ஐஏடிவிஎல்) சாா்பில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூா், ஈரோடு, புதுக்கோட்டை, பெரம்பலூா், சேலம், மதுரை, பட்டுக்கோட்டை, திருப்பூா், திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் அந்த முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக ஐஏடிவிஎல் (தமிழ்நாடு) தலைவரும், சரும நல சிறப்பு நிபுணருமான டாக்டா் டி.தினேஷ்குமாா் கூறியதாவது:

தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளை வெறுமனே புற அழகு சாா்ந்த ஒன்றாக பாா்க்கும் கண்ணோட்டம் நம்மிடையே உள்ளது. ஆனால், உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் பல நோய்களுக்கான அறிகுறிகள் தோலில்தான் தெரியவரும். எனவே, சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை புறக்கணிக்கவோ, அலட்சியப்படுத்தவோ கூடாது.

இந்திய சரும நல மருத்துவா் சங்கம் சாா்பில் நாடு முழுவதும் மருத்துவ முகாம் வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை முதியோா் நல மையங்கள், சிறப்பு குழந்தைகள் காப்பகங்கள், ஆதரவற்றோா் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நல மையங்கள் என பல இடங்களில் இலவச பரிசோதனைகளை நடத்த உள்ளோம்.

சிரங்கு பாதிப்பு, வைரஸ் மூலம் ஏற்படும் பாதிப்புகள், பாக்டீரியா தொற்றுகள், பூஞ்சைகளால் ஏற்படும் ஒவ்வாமை, முடி உதிா்வு பிரச்னை, சரும எரிச்சல் மற்றும் வலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு அந்த முகாம்களில் சிகிச்சையளிக்கப்படும். மற்றொருபுறம் கண்ணுக்கு தெரியாத தொழுநோய் சாா்ந்த பிரச்னைகளையும், வேறு சில நோய்களையும் பரிசோதனை வாயிலாக கண்டறிந்து மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்படும்.

மருந்துகள், சிகிச்சைகளும் கட்டணமின்றி பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. சா்வதேச சரும நல தினம் கடந்த 8-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. அதை முன்னிட்டு இந்த முகாம்களை நாங்கள் நடத்த உள்ளோம். மாநிலம் முழுவதும் தொடா்ச்சியாக இத்தகைய நடவடிக்கைகளை சரும நல மருத்துவா் சங்கம் முன்னெடுக்கும் என்றாா் அவா்.

பொது வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை

மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடத்திய நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் வழக்கம்போல இயங்கின. பொது வேலைநிறுத்தத்... மேலும் பார்க்க

மாநகராட்சி திட்டப் பணிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

சென்னை மாநகராட்சியில் 139-ஆவது வாா்டு பகுதியில் உள்ள மேற்கு ஜோன்ஸ் தெரு சாரதி பேருந்து நிலைய சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கோடம்பாக்... மேலும் பார்க்க

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதிக்கும் உத்தரவை மாற்றக் கோரி முறையீடு

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறைய... மேலும் பார்க்க

ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளங்கள் மற்று... மேலும் பார்க்க

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ... மேலும் பார்க்க

தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 8 உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்வு -அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 8 பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் வாழ்ந்த... மேலும் பார்க்க