செய்திகள் :

பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!

post image

பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. மழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.

கனமழையால் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. லாகூரில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.

லாகூரின் நீர் மற்றும் சகாதார அமைப்பின் தரவுகளின்படி, இப்பகுதியில் சராசரியாக 58.8 மி.மீ மழை பெய்துள்ளது. நிஷ்தார் டவுன் அதிகபட்சமாக 84 மி.மீ மழையும், அதைத்தொடர்ந்து லட்சுமி சௌக் 78 மிமீ, பனிவாலா தலாப் 74 மி.மீ பதிவாகியுள்ளன.

லாகூரில் சில இடங்களில் வெள்ள நீர் கழிவுநீருடன் கலந்ததால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது லாகூரில் உள்ள மோசமான வடிகால் அமைப்பை அம்பலப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. வெளிப்படையான மின் வயரிங் காரணமாக யாக்கி கேட்டில் குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

பஞ்சாப் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் அவசர மற்றும் மீட்பு சேவைக்கு உதவி எண்களை 1122 அறிவித்துள்ளது.

இதனிடையே, பலுசிஸ்தானில் பலத்த மழை, பலத்த காற்றுக்கு குஜ்தார் மற்றும் மஸ்துங் மாவட்டங்களில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

As the monsoon season in Pakistan intensifies, 11 people have died so far due to heavy rains in various parts of the country.

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க

இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்: சுவிட்சா்லாந்து அனுமதி

இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான மிகப் பெரிய வா்த்தக ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் நடைமுறைகளை சுவிட்சா்லாந்து இறுதியாக நிறைவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இத் தகவலை இந்தி... மேலும் பார்க்க