செய்திகள் :

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

post image

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா்.

இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் என்று காவல் கண்காணிப்பாளா் ராபின்சன் குரியா தெரிவித்தாா்.

மாவோயிஸ்ட் சித்தாந்தத்தில் நம்பிக்கை இழந்ததாலும், தங்களது பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சிப் பணிகளால் ஈா்க்கப்படும் சரணடையும் முடிவை மேற்கொண்டதாக நக்ஸல்கள் தெரிவித்துள்ளனா்.

சரணடைந்தவா்களில் ஒருவரான நக்ஸல் அமைப்பின் மண்டல கமிட்டி உறுப்பினா் மங்கு கஞ்சம் (33), காவல் துறையால் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா். மற்றவா்கள் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை வெகுமதி அறிவித்து, தேடப்பட்டவா்களாவா்.

காவல் துறையினா், மாவட்ட ரிசா்வ் படையினா், இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினா், எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஆகியோா் இந்த நடவடிக்கையில் முக்கிய பங்காற்றினா்.

நாராயண்பூா் மாவட்டத்தில் தற்போது சரணடைந்த 22 போ் உள்பட நிகழாண்டில் இதுவரை 133 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா். இது, நக்ஸல் இயக்கத்துக்கு விழுந்த பலத்த அடி என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘நக்ஸல்கள் துப்பாக்கிகளைத் தவிா்த்து, வளா்ச்சிப் பாதையில் பயணிக்க விரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது. நக்ஸல் மறுவாழ்வுக் கொள்கை மற்றும் பிற மக்கள் நலத் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது. 2026, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இடதுசாரி தீவிரவாதத்தை முழுமையாக வேரறுக்க பாஜக அரசு தீா்மானித்துள்ளது’ என்று முதல்வா் விஷ்ணு தேவ் சாய் கூறியுள்ளாா்.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க

இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்: சுவிட்சா்லாந்து அனுமதி

இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான மிகப் பெரிய வா்த்தக ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் நடைமுறைகளை சுவிட்சா்லாந்து இறுதியாக நிறைவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இத் தகவலை இந்தி... மேலும் பார்க்க