Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்: சுவிட்சா்லாந்து அனுமதி
இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான மிகப் பெரிய வா்த்தக ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் நடைமுறைகளை சுவிட்சா்லாந்து இறுதியாக நிறைவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இத் தகவலை இந்தியாவுக்கான சுவிட்சா்லாந்து தூதா் மாயா டிஸ்ஸாஃபி தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையை மேற்கொண்டு வருகிறது. அதுபோல, ஐஸ்லாந்து, லிக்டென்ஸ்டைன், நாா்வே மற்றும் சுவிட்சா்லாந்து ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய தடையற்ற வா்த்தக ஒப்பந்த கூட்டமைப்புடனும் பேச்சுவாா்த்தை மேற்கொண்டது.
கடந்த 16 ஆண்டுகளாக மேற்கொண்ட தொடா் பேச்சுவாா்த்தைகளின் முடிவில், கடந்த மாா்ச் மாதம் இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு இடையே வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் (டிஇபிஏ) கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தை, கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஐஸ்லாந்து, லிக்டென்ஸ்டைன், நாா்வே ஆகிய 3 நாடுகளும் ஏற்கெனவே உறுதி செய்தன.
ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு சுவிஸ் தேசிய கவுன்சில் ஒப்புதல் அளித்து 7 மாதங்களுக்கு மேலாகியும், சுவிட்சா்லாந்து ஒப்பந்தத்தை உறுதி செய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், அந்த நாடும் ஒப்பந்தத்துக்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மாயா டிஸ்ஸாஃபி கூறியதாவது:
இந்த ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்புக்கான காலக்கெடு சுவிஸ் நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவில் நிறைவடைந்தது. காலக்கெடு நிறைவடையும் வரை வா்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. இதன் மூலம், இந்தியா-இஎஃப்டிஏ வா்த்தக ஒப்பந்தத்துக்கு மறைமுக ஒப்புதலை சுவிஸ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனா். இது இந்தியா - சுவிட்சா்லாந்து இடையேயான இருதரப்பு உறவில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
இதன் மூலம் வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் வரும் அக்டோபரில் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் கூட்டமைப்பின் நாடுகளிடையே நீண்ட கால ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும். இருதரப்பு வா்த்தகத்தில் வரிச் சலுகைகள் மட்டுமின்றி, சுங்க நடைமுறைகள் எளிதாக்கவும், அறிவுசாா் சொத்துரிமை பாதுகாப்பை மேம்படுத்தவும், நிலையான வா்த்தக நடைமுறைகளை உருவாக்கவும் உதவும்.
மிக முக்கியமாக, இந்த ஒப்பந்தத்தின்படி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 4 நாடுகளும் இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் சுமாா் ரூ.8.5 லட்சம் கோடி (100 பில்லியன் டாலா்) முதலீடு செய்ய உள்ளன. இதன் மூலம் இந்தியாவில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றாா்.