மனைவி மீது சந்தேகம்! குழந்தைக்கு டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட முடியாது
மும்பை: கணவருக்கு, தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், விதிவிலக்கான வழக்குகளில், ஒரு குழந்தையின் தந்தையை உறுதி செய்வதற்காக மட்டுமே டிஎன்ஏ சோதனை நடத்தப்படுகிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.