செய்திகள் :

`பட்டாசு ஆலை வெடி விபத்து' - பாதுகாப்பு அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

post image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியானதன் அடிப்படையில், பட்டாசு ஆலை விபத்துகளே இனி நிகழக் கூடாது என்னும் நோக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கோர்லபாடி அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணக்கு எடுத்துள்ளது.

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம்

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், "பட்டாசு ஆலை துவங்குவதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறையிடம் உரிமம் பெற வேண்டும். ஆனால், பட்டாசு ஆலைக்கு உரிமம் வழங்குவதற்கு முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறதா? தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறதா? போன்ற கேள்விகளுக்கு மத்திய அரசிடம் உரிய விளக்கம் இல்லை. அதனால், விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீர்ப்பாயம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது" எனக்கூறியிருந்தது.

விதிகளை பின்பற்றவில்லை என்றால் அனுமதி வழங்கக்கூடாது

இதையடுத்து இந்த வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த தீர்ப்பாயம், ஆலைகளில் தொடர் மேற்பார்வைகள் இல்லாததால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பட்டாசுகளை சேமித்து வைக்கின்றனர். இதனால், தொடர்ந்து பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் பட்டாசு ஆலைகளை சுற்றி வீடுகள் இருப்பதால் பாதிப்புகள் ஏற்படுகிறது. விதிகளை பின்பற்றாத எந்த ஆலைக்கும் இனி அனுமதி வழங்க கூடாது.

பட்டாசு ஆலை வெடிவிபத்து

ஆய்வுகளை மேற்கொள்ள இரு குழுக்கள் அமைப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தடையில்லா சான்று வழங்குவதற்கு முன், பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா? அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்கிறார்களா? விதிமீறல்கள் ஏதும் உள்ளதா? என்கிற ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு குழுக்களை அமைத்து உத்தரவிட்டனர்.

இந்த குழுக்கள் நேரடியாக ஆலைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். விபத்துகள் நடக்காமல் தடுக்கவும், தீவிரத்தையும் கருத்தில் கொண்டு 10 நாள்களுக்குள் இந்த ஆய்வுகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

`இருண்டகாலம்' - இந்திராகாந்தியை விமர்சித்த சசிதரூர்.. `இவர் எந்த கட்சி?' - கொந்தளித்த காங்கிரஸ்

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற எம்.பி-யுமான சசிதரூர் சொந்த கட்சி தலைமையை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கும் வகையில் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்துவருகிறார். பிரதமர் மோடியை அடிக்கடி புக... மேலும் பார்க்க

``நீ என்ன ரெளடியா.. உன் சட்டையை கழற்றாமல் விட மாட்டேன்'' - போலீஸை மிரட்டிய கோவை திமுக நிர்வாகி

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்ப... மேலும் பார்க்க

``139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடியா?'' - அதிமுக குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்

139 தெருநாய்களுக்குக் கருத்தடைச் செய்ய திமுக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியதாக அதிமுகவின் ஐ.டி விங் எக்ஸ் பக்கத்தில் பதிவு என்று பதிவிடப்பட்டது. அதிமுக ஐ.டி விங்கின் முழு பதிவு இதோ... தெரு நாய்களிடமும் ஊழல்... மேலும் பார்க்க

``ஒரு‌முறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்; மற்ற 2 முறை எப்போது?'' - மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்... மேலும் பார்க்க

மதுரை: ``தடையை மீறி மேற்கு தொடர்ச்சி மலைக்கு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன்'' - சீமான்

`மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' - நாதக மாநாடு"மாடு மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம். திருமால், பெருமாள், கண்னன், நபிகள், இயேசு ஆகியோர் ஆடு மாடு மேய்த்தார்கள், கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை" என்று ந... மேலும் பார்க்க

ஓசூர்: தெரு நாய் கடித்து உயிரிழந்த இளைஞர்.. ரேபீஸ் பாதிப்பால் துயரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எட்வின் பிரியன் (24). எம்பிஏ பட்டதாரியான இவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்து உள்ளது. நாய் கடியை அலட்சியமாக எடுத்... மேலும் பார்க்க