செய்திகள் :

``நீ என்ன ரெளடியா.. உன் சட்டையை கழற்றாமல் விட மாட்டேன்'' - போலீஸை மிரட்டிய கோவை திமுக நிர்வாகி

post image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை
எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை

இதற்காக அதிமுக நிர்வாகிகள் சார்பில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டன. அதன்படி எடப்பாடி பழனிசாமி டவுன்ஹால் பகுதிக்கும் பிரசாரம் செய்ய சென்றிருந்தார்.

அங்கு ஏற்கெனவே திமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அதிமுகவினர், திமுகவினர் பேனரை மறைத்தபடி தங்கள் பேனரை வைத்ததாக திமுகவினர் புகார் கூறினர். ஒருகட்டத்தில் அதிமுகவினர் வைத்த பேனரை, திமுகவினர் அகற்றியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி பேனர்

இதனால் இரண்டு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், இரண்டு தரப்பினரிடமும் சமாதானம் பேச முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றியுள்ளது.

இந்த தகவலறிந்து கோவை திமுக மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் அங்கு வந்துள்ளார். அவர் அங்கு சீருடையில் இருந்த காவல்துறையினரிடம்  கடும் கோபத்தில் பேசினார், “திமுககாரன்னா என்ன பைத்தியக்காரனா. நீ என்ன ரவுடியா. உன் சட்டையை கழற்றாமல் விடமாட்டேன். மரியாதையா பேசிக்கோ.” என்று ஒருமையில் கண்டித்தார்.

கோவை திமுக நிர்வாகி போலீஸ் மிரட்டல்

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், “உக்கடம் காவல்  உதவி ஆய்வாளர் அஜய் சர்மா, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கைக்கூலியாக செயல்படுகிறார்.” என திமுகவினர் கோஷம் எழுப்பினர்.

Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் திரும்புமா?

Doctor Vikatan: என் வயது 63. எனக்கு 20 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. 56 வயதில் பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டேன். அதற்கு ஒரு வருடத்துக்கு முன் 2 ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. 2023-ல் பக்கவாதம் வந்து... மேலும் பார்க்க

`இருண்டகாலம்' - இந்திராகாந்தியை விமர்சித்த சசிதரூர்.. `இவர் எந்த கட்சி?' - கொந்தளித்த காங்கிரஸ்

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற எம்.பி-யுமான சசிதரூர் சொந்த கட்சி தலைமையை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கும் வகையில் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்துவருகிறார். பிரதமர் மோடியை அடிக்கடி புக... மேலும் பார்க்க

``139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடியா?'' - அதிமுக குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்

139 தெருநாய்களுக்குக் கருத்தடைச் செய்ய திமுக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியதாக அதிமுகவின் ஐ.டி விங் எக்ஸ் பக்கத்தில் பதிவு என்று பதிவிடப்பட்டது. அதிமுக ஐ.டி விங்கின் முழு பதிவு இதோ... தெரு நாய்களிடமும் ஊழல்... மேலும் பார்க்க

``ஒரு‌முறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்; மற்ற 2 முறை எப்போது?'' - மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்... மேலும் பார்க்க

மதுரை: ``தடையை மீறி மேற்கு தொடர்ச்சி மலைக்கு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன்'' - சீமான்

`மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' - நாதக மாநாடு"மாடு மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம். திருமால், பெருமாள், கண்னன், நபிகள், இயேசு ஆகியோர் ஆடு மாடு மேய்த்தார்கள், கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை" என்று ந... மேலும் பார்க்க

ஓசூர்: தெரு நாய் கடித்து உயிரிழந்த இளைஞர்.. ரேபீஸ் பாதிப்பால் துயரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எட்வின் பிரியன் (24). எம்பிஏ பட்டதாரியான இவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்து உள்ளது. நாய் கடியை அலட்சியமாக எடுத்... மேலும் பார்க்க