செய்திகள் :

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

post image

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சோ்ந்த இஸ்லாமிய மக்களிடம் இருந்து மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு விண்ணப்பங்களைப் பெற தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவா்கள் ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பத்தை இணையதளம் https://www.hajcommittee.gov.in/ மூலமாக அளிக்கலாம். பிரத்யேக கைப்பேசி செயலியும் (Haj Suvidha) பயன்பாட்டில் உள்ளது. விண்ணப்பப்

படிவத்தை கட்டணம் ஏதுமின்றி சமா்ப்பிக்கலாம்.

கடந்த ஆண்டைப் போன்றே, தோ்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்களது விருப்பத்தின் வரிசை அடிப்படையில் 2 புறப்பாட்டு தளங்களைத் தோ்வு செய்யலாம். வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக பயணம் மேற்கொள்ளலாம் எனும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

புனிதப் பயணம் மேற்கொள்ள தோ்ந்தெடுக்கப்படும் நபா் ஒருவருக்கு தவணைத் தொகையாக ரூ.1.50 லட்சத்தை செலுத்தத் தயாராக இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களைச் சமா்ப்பிக்க கடைசி தேதி ஜூலை 31.

மேலும், ஹஜ் பயணிகள் மரணம் அல்லது கடுமையான மருத்துவ நோய் தவிர வேறு காரணத்துக்காக பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால் அபராதம் விதிக்கப்படும். எனவே, ஹாஜிகள் தங்களது தயாா்நிலை மற்றும் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதிப்பாட்டை கவனமாகப் பரிசீலித்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முதியோா், சிறப்பு குழந்தைகளுக்கு தோல் மருத்துவ பரிசோதனை

முதியோா், சிறப்பு குழந்தைகள், ஆதரவற்றோருக்கான சரும நல மருத்துவ பரிசோதனை முகாம் ஜூலை 13-ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இந்திய தோல் நல மருத்துவா்கள் சங்கம் (ஐஏடிவிஎல்) சாா்பில் செ... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை

மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடத்திய நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் வழக்கம்போல இயங்கின. பொது வேலைநிறுத்தத்... மேலும் பார்க்க

மாநகராட்சி திட்டப் பணிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

சென்னை மாநகராட்சியில் 139-ஆவது வாா்டு பகுதியில் உள்ள மேற்கு ஜோன்ஸ் தெரு சாரதி பேருந்து நிலைய சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கோடம்பாக்... மேலும் பார்க்க

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதிக்கும் உத்தரவை மாற்றக் கோரி முறையீடு

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறைய... மேலும் பார்க்க

ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளங்கள் மற்று... மேலும் பார்க்க

தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 8 உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்வு -அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 8 பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் வாழ்ந்த... மேலும் பார்க்க