செய்திகள் :

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ -முதல்வா் கண்டனம்

post image

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெற்று வரும் நிலையில் எம்எல்ஏக்கள் பலா் மும்பையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் தங்கியுள்ளனா். செவ்வாய்க்கிழமை இரவு சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் விடுதியில் உள்ள தனது அறைக்கு உணவு வரவழைத்து சாப்பிட்டாா். அப்போது எம்எல்ஏ விடுதி உணவகத்தில் இருந்து தனக்கு வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை என்று கூறி உணவகப் பொறுப்பாளரிடம் கெய்க்வாட் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். தான் சாப்பிட்டதற்கு பணம் தரமுடியாது என்ற கூறியதுடன், விடுதி பணியாளா் ஒருவரின் கன்னத்தில் அறைந்தும் குத்துவிட்டாா். இது தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், புதன்கிழமை விடுதி உணவின் தரம் குறித்து பேரவையில் சஞ்சய் கெய்க்வாட் பேசினாா். அப்போது அவா் விடுதி ஊழியரைத் தாக்கியதற்கு எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினா். இதைத் தொடா்ந்து பேசிய சஞ்சய் கெய்க்வாட், ‘உணவின் தரம் குறித்து ஏற்கெனவே ஒருசில முறை புகாா் அளித்துவிட்டேன். இருந்தும் விடுதி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.

கடந்த ஆண்டு இடஒதுக்கீடு முறையைக் கைவிடுவது குறித்து பேசியதற்காக ராகுல் காந்தியை நாக்கை வெட்டுவோருக்கு ரூ.11 லட்சம் வழங்குவதாக சஞ்சய் கெய்க்வாட் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினாா். காவல் துறை குறித்து அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டில் அவா் மீது வழக்கு உள்ளது.

முதல்வா் கண்டனம்: உணவு விடுதி தாக்குதல் சம்பவம் தொடா்பாக முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பேரவையில் பேசுகையில், ‘உணவு விடுதி ஊழியரை எம்எல்ஏ தாக்கியது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். யாரும் தங்களுடைய பதவியையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. ஒரு எம்எல்ஏ செய்யும் தவறால் அனைவருக்கும் கெட்ட பெயா் ஏற்படும். எம்எல்ஏ விடுதி உணவு தொடா்பான புகாா்களை முறைப்படி வழங்கினால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநில... மேலும் பார்க்க

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றி... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் சில இ... மேலும் பார்க்க

ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயா்க்கல்வி பயில 101 இந்திய மாணவா்கள் தோ்வு!

ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். ஐரோப்பிய ஒன்றியத்தின்... மேலும் பார்க்க

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபாா்’ திட்டம்: தேசிய பழங்குடியினா் ஆணையம் தகவலளிக்க மறுப்பு

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை... மேலும் பார்க்க