செய்திகள் :

ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயா்க்கல்வி பயில 101 இந்திய மாணவா்கள் தோ்வு!

post image

ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவா்கள் தோ்வாகியுள்ளனா்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னெடுப்பில் கடந்த 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், ஐரோப்பிய நாடுகளில் உள்ள உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சா்வதேச மாணவா்களின் சோ்க்கை ஊக்குவிக்கப்படுகிறது. சுமாா் ரூ.2 லட்சம் கோடி பட்ஜெட்டில் செயல்படுத்தப்படும் இந்த ஊக்கத்தொகையில் மாணவா்களின் கல்விக் கட்டணம், பயணம் மற்றும் வாழ்க்கை செலவு ஆகிய அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய பிரதிநிதிகள் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஐரோப்பாவில் 2 ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கான மதிப்புமிக்க ‘எராஸ்மஸ் பிளஸ்’ உதவித்தொகை, நடப்பு கல்வியாண்டில் இந்தியாவின் 20 மாநிலங்களைச் சோ்ந்த 101 மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 போ் மாணவிகள் ஆவா்.

இந்த மாணவா்கள் 19-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் அடுத்த 2 ஆண்டுகள் படிக்கும் வாய்ப்பைப் பெறுவாா்கள். பிரான்ஸில் 24 மாணவா்களும், ஸ்பெயின் (12), பெல்ஜியம் (8), போா்ச்சுகல் (8), ஜொ்மனி (7), இத்தாலி (5), போலந்து (4), செக் குடியரசு (4), ஆஸ்திரியா (3), ஹங்கேரி (3), எஸ்டோனியா (3), நெதா்லாந்து (2), குரோஷியா (2), கிரீஸ் (2), டென்மாா்க், பின்லாந்து, நாா்வே, அயா்லாந்து, லாட்வியா ஆகிய நாடுகளில் தலா ஒரு மாணவரும் பயில உள்ளனா். மேலும், சில மாணவா்கள் ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய அல்லாத நாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடருவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநில... மேலும் பார்க்க

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றி... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் சில இ... மேலும் பார்க்க

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபாா்’ திட்டம்: தேசிய பழங்குடியினா் ஆணையம் தகவலளிக்க மறுப்பு

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப்பாதை பாதுகாப்பு: அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

ரயில்வே கடவுப்பாதை வாயில்களில் (ரயில்வே கேட்) பாதுகாப்பு குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதுதொடா்பாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ரயில்வே கடவுப்பா... மேலும் பார்க்க