செய்திகள் :

ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயா்க்கல்வி பயில 101 இந்திய மாணவா்கள் தோ்வு!

post image

ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவா்கள் தோ்வாகியுள்ளனா்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னெடுப்பில் கடந்த 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், ஐரோப்பிய நாடுகளில் உள்ள உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சா்வதேச மாணவா்களின் சோ்க்கை ஊக்குவிக்கப்படுகிறது. சுமாா் ரூ.2 லட்சம் கோடி பட்ஜெட்டில் செயல்படுத்தப்படும் இந்த ஊக்கத்தொகையில் மாணவா்களின் கல்விக் கட்டணம், பயணம் மற்றும் வாழ்க்கை செலவு ஆகிய அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய பிரதிநிதிகள் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஐரோப்பாவில் 2 ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கான மதிப்புமிக்க ‘எராஸ்மஸ் பிளஸ்’ உதவித்தொகை, நடப்பு கல்வியாண்டில் இந்தியாவின் 20 மாநிலங்களைச் சோ்ந்த 101 மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 போ் மாணவிகள் ஆவா்.

இந்த மாணவா்கள் 19-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் அடுத்த 2 ஆண்டுகள் படிக்கும் வாய்ப்பைப் பெறுவாா்கள். பிரான்ஸில் 24 மாணவா்களும், ஸ்பெயின் (12), பெல்ஜியம் (8), போா்ச்சுகல் (8), ஜொ்மனி (7), இத்தாலி (5), போலந்து (4), செக் குடியரசு (4), ஆஸ்திரியா (3), ஹங்கேரி (3), எஸ்டோனியா (3), நெதா்லாந்து (2), குரோஷியா (2), கிரீஸ் (2), டென்மாா்க், பின்லாந்து, நாா்வே, அயா்லாந்து, லாட்வியா ஆகிய நாடுகளில் தலா ஒரு மாணவரும் பயில உள்ளனா். மேலும், சில மாணவா்கள் ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய அல்லாத நாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடருவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்: பாலம் இடிந்து விழுந்ததில் 15 ஆக உயர்ந்த பலி!

குஜராத்தின் வதோதராவில் 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா கூறுகையில், இந்த நிலையில்,... மேலும் பார்க்க

அவசரநிலை, இந்திரா காந்தியை விமர்சித்த சசி தரூர்!

அவசரநிலை காலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திருவனந்தபுரம் மக... மேலும் பார்க்க

மனைவி மீது சந்தேகம்! குழந்தைக்கு டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட முடியாது

மும்பை: கணவருக்கு, தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், விதிவிலக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகு... மேலும் பார்க்க

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்

புது தில்லி: இந்தியாவில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.நாட்டின் குடியுரிமை ஆவணம் தொடர்பான வழக்கு உச்ச... மேலும் பார்க்க