செய்திகள் :

திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

post image

திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

திருவாரூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சன்னநிதி தெருவில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று பிரசாரம் மேற்கொண்டதுடன், உறுப்பினர் சேர்க்கையிலும் ஈடுபட்டார்.

தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.7.2025) திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார்.

அப்போது, திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார்.

”முதலாவது அறிவிப்பு - திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பழமை வாய்ந்த ஜுபிளி மார்க்கெட் பகுதியில், ரூ. 11 கோடி செலவில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். 

இரண்டாவது அறிவிப்பு - திருவாரூர் மாவட்ட மாணவர்கள்
பயன்பெறும் வகையில் நன்னிலம் வட்டம், வண்டாம்பாளை ஊராட்சியில்  ரூ. 56 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன், “திருவாரூர் மாவட்ட மாதிரிப் பள்ளி” புதிதாக அமைக்கப்படும். 

மூன்றாவது அறிவிப்பு - மன்னார்குடி பகுதியில் இருக்கும் மாணவிகள் பயன்பெறும் வகையில், மன்னார்குடி நகராட்சியில் ரூ. 18 கோடி செலவில், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படும். 

நான்காவது அறிவிப்பு - திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களின் மதகுகள் மற்றும் நீர் ரெகுலேட்டர்கள் ஆகியவை ரூ. 43 கோடி செலவில் புனரமைக்கப்படும். 

ஐந்தாவது அறிவிப்பு - நன்னிலம் வட்டத்தில் இருக்கும் பூந்தோட்டம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். 

ஆறாவது அறிவிப்பு - பாரம்பரிய நெல் இரகங்களைத் தம் வாழ்நாள் முழுவதும் பேணிப் பாதுகாத்த “நெல் ஜெயராமன்” அவர்களின் அரும்பணியைப் போற்றக்கூடிய வகையில் திருத்துறைப்பூண்டியில், அவருக்கு நினைவுச் சிலை அமைக்கப்படும். இந்த அறிவிப்புகள் எல்லாம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். ” என்றார்.

Chief Minister Stalin has issued 6 new announcements for Tiruvarur district.

இதையும் படிக்க: நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க

நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்

கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். உலக மக்கள் தொகை தின நிகழ்... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப்பாதை ஆய்வு அறிக்கை: 2 வாரத்தில் சமா்ப்பிக்க உத்தரவு

ரயில்வே கடவுப் பாதைகளின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், தற்போதைய நிலை அந்தப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைத்தல் போன்றவை குறித்து 15 ... மேலும் பார்க்க

5 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வேயில் முக்கிய 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று, புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: ஆட்சியா்களுடன் முதல்வா் ஆலோசனை

அரசின் சேவைகளை இல்லங்களுக்கே கொண்டு சோ்க்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக... மேலும் பார்க்க