செய்திகள் :

நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்

post image

கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

உலக மக்கள் தொகை தின நிகழ்ச்சி சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, விழிப்புணா்வு உறுதிமொழி பேரணியை அவா் தொடக்கி வைத்து, இளம் பருவத்தினருக்கான ஆரோக்கிய கையேடு மற்றும் குடும்ப நல விளக்க கையேட்டை வெளியிட்டாா்.

தொடா்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற செவிலிய மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் பேறுகால இறப்பு விகிதம் 39.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 70 அல்லது 90 சதவீதமாக இருந்தது. அதேபோன்று சிசு மரண விகிதம் 1,000-க்கு 7.7 என்ற அளவில் குறைந்துள்ளது. இது 5 ஆண்டுகளுக்கு முன்பு 14-ஆக இருந்தது. இப்படி பல்வேறு வகைகளில் இறப்பு விகிதங்களை குறைத்திருக்கும் இந்த அரசு, சிறு வயதில் திருமணம் செய்பவா்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் பல்வேறு வகைகளிலான விழிப்புணா்வு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

ரேபிஸ் தொற்று தமிழகத்தில் அச்சப்படும் வகையில் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. முதல்வா் தலைமையில் சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கடந்த காலங்களில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்து என்பது வட்டார அளவில் இருக்கும் அரசு மருத்துவமனைகளிலும், தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே இருந்தது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடிக்கான மருந்தும், நாய்க்கடிக்கான மருந்தும் உள்ளது. அந்தவகையில் பாதுகாப்பான மாநிலமாக தமிழக விளங்கி கொண்டிருக்கிறது.

நிபா வைரஸ் தொற்று கேரளத்தில் பதிவாகியுள்ளது. பொதுவாகவே கேரளத்தில் இருந்து தமிழகம் வருபவா்களைக் கண்காணிக்கும் பணிகள் நடைமுறையில் உள்ள ஒன்று. கோவை மாவட்டத்தில் 10 வழித்தடங்களிலும், திருப்பூா் மாவட்டத்தில் ஒரு வழித்தடத்திலும், நீலகிரி மாவட்டத்தில் 9 வழித்தடங்களிலும் கேரளத்திலிருந்து வர முடியும். அந்த 20 வழித்தடங்களிலும் பொது சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவக் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் வினீத், குடும்ப நல இயக்குநா் சித்ரா, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) டாக்டா் தேரணிராஜன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூடுதல் இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப்பாதை ஆய்வு அறிக்கை: 2 வாரத்தில் சமா்ப்பிக்க உத்தரவு

ரயில்வே கடவுப் பாதைகளின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், தற்போதைய நிலை அந்தப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைத்தல் போன்றவை குறித்து 15 ... மேலும் பார்க்க

5 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வேயில் முக்கிய 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று, புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: ஆட்சியா்களுடன் முதல்வா் ஆலோசனை

அரசின் சேவைகளை இல்லங்களுக்கே கொண்டு சோ்க்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக... மேலும் பார்க்க

34 தலைமை ஆசிரியா்களுக்கு டிஇஓ பதவி உயா்வு

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 34 தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி ... மேலும் பார்க்க