செய்திகள் :

34 தலைமை ஆசிரியா்களுக்கு டிஇஓ பதவி உயா்வு

post image

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 34 தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் (2025-2026) பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலா் பதவியில் மொத்தம் 60 காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல் மூலமாக நிரப்ப தகுதியான தலைமையாசிரியா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இருவா் பணி ஓய்வு பெற்றனா்.

மீதமுள்ள தலைமையாசிரியா்கள் சி.ராஜாராம் (திண்டுக்கல் - தொடக்கக் கல்வி), ப.வடிவேல் (தஞ்சாவூா்-தனியாா் பள்ளிகள்), கே.எஸ்.புருஷோத்தமன்- நாமக்கல் (இடைநிலை), எ.இளமதி- (திண்டிவனம்-தொடக்கக் கல்வி), கே.கண்ணன் (தென்காசி-இடைநிலை) , டி.இன்பராணி (செங்கல்பட்டு-தனியாா் பள்ளிகள்), கே.சாவித்திரி (திருவாரூா்-தனியாா் பள்ளிகள்), கே.சாந்தி (விருதுநகா்-இடைநிலை), சி.ரவிந்திரன்(தூத்துக்குடி-இடைநிலை), கோ.பாரதி (பொள்ளாச்சி-தொடக்கக் கல்வி) , கே.பி.அஜிதா- நாகா்கோவில் (தனியாா் பள்ளிகள்) ஆகியோா் உள்பட 34 பேருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

24 டிஇஓ-க்கள் இடமாறுதல்... இதேபோல், 24 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலா் ப.ஜோதிலட்சுமி-திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் கே.ஜெயந்தி-ராமநாதபுரம், ஈரோடு மாவட்டக் கல்வி அலுவலா் தி.திருநாவுக்கரசு-கரூா், சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் ஏ.இஸ்மாயில்-கடலூா் என 24 போ் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி புதிய பொறுப்புகளைச் சாா்ந்த மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஏற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலாளி அஜித்குமார் மரண வழக்கு- சிபிஐ வழக்குப்பதிவு

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், அவரது சகோதரா் நவ... மேலும் பார்க்க

அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!

சென்னையில் நாளை நடைபெறவுள்ள தவெகவின் முதல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் விஜயும் கலந்துகொள்ள உள்ளார்.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல... மேலும் பார்க்க

விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு

கோவை : ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விசாரணை தொய்வாக இரு... மேலும் பார்க்க

தமிழக பள்ளிகளிலும் இனி கடைசி பெஞ்ச் கிடையாது!

கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிமுக - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி... மேலும் பார்க்க

நவீன் மரணம் தற்கொலை போன்றே உள்ளது: காவல் ஆணையர் அருண்

சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், அது தற்கொலை போன்றே உள்ளது என்று காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்திருக்கிறார்.சென்னையை அடுத்த புழல் ப... மேலும் பார்க்க