செய்திகள் :

Skincase: மனித தோல் வடிவில் போன் கவர் உருவாக்கிய விஞ்ஞானிகள் - என்ன காரணம் தெரியுமா?

post image

பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் மார்க் டெய்சியர், விர்ஜின் மீடியா O2 உடன் இணைந்து, ஸ்கின்கேஸ் என்ற தொலைபேசி உறையை உருவாக்கியுள்ளார்.

இந்த போன் கவர் சூரிய ஒளியில், அதிக யூவி கதிர்கள் வெளிப்படும் போது நிறம் மாற்றம் அடைந்து ஒரு வித்தியாசமான தோற்றத்தை உருவாக்குகிறது.

இதன் நோக்கம் என்ன?

வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் பலர் இதனை செய்வதில்லை. இதற்காக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஸ்கின் கேஸை பிரெஞ்சு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஸ்கின் கேஸ் சிலிக்கான் மற்றும் UV எதிர்வினை மூலக்கூறுகளில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 3d பிரிண்டிங் மற்றும் கை சிற்பத்தின் கலவையும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மூன்று தோல் நிறங்களில் வரும் இந்த ஸ்கின் கேஸ் சூரிய ஒளி படும்போது உண்மையான தோலை போன்று அது நிறம் மாறுகிறது. மனித தோலை போன்ற நுண்ணிய கோடுகளுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்துவதால் வெயிலின் தாக்கம் எந்த அளவு கடுமையானது என்பதை மக்கள் உணரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

விடுமுறை காலங்களில் மக்கள் தங்கள் போன்களை அதிகமாக பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சூரிய ஒளியின் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களை சான்ஸ்கிரீன் பயன்படுத்தத் தூண்டவும் இந்த ஸ்கின் கேஸ் உருவாக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தற்போது இந்த ஸ்கின் கேஸ் விற்பனைக்கு வரவில்லை என்றாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த புதுமையான முயற்சி மக்களிடையே கவனம் பெற்றுவருகிறது.

ஒலிபெருக்கி இல்லாத மும்பை: மசூதி, வழிபாட்டுத்தலங்களில் இருந்த 1,600 ஒலிபெருக்கிகள் அகற்றம்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் சட்டவிரோத ஒலிபெருக்கிகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வரு... மேலும் பார்க்க

Jaipur: 'தினமும் 12 மணி நேரம் படிப்பு; பேத்தியின் உத்வேகம்' - CA தேர்வில் வென்ற 71 வயது முதியவர்!

பேத்தியின் உத்வேகத்தால் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 71 வயதில் சார்ட்டட் அக்கவுண்ட் படிப்பைப் படித்த சாதித்துள்ளார்.லிங்க்ட் இன் பதிவின்படி, ஓய்வு பெற்ற வங்கி நிபுணரான தாராசாந்த் அகர்வால்... மேலும் பார்க்க

சென்னை: "என்னாச்சு? நீங்க ஓகேதான?" - டிராஃபிக் போலீசாரின் வார்த்தையால் நெகிழ்ந்த பெண்; என்ன நடந்தது?

சென்னை போக்குவரத்து காவலருடனான ஒரு சிறிய உரையாடல், பெண் ஒருவரை எப்படி நெகிழ வைத்தது என்பது குறித்து அவர் லிங்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.சென்னையை... மேலும் பார்க்க

Gingee Fort: செஞ்சி கோட்டையை உலகப் பாரம்பர்ய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ; சுவாரஸ்ய பின்னணி என்ன?

சத்ரபதி சிவாஜி மகாராஜா மகாராஷ்டிரா முழுவதும் கோட்டைகளைக் கட்டினார். இக்கோட்டைகள் இன்றைக்கும் சுற்றுலா மையங்களாகவும், சத்ரபதி சிவாஜியின் பெயர் சொல்லும் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன.இந்நிலையில் மகார... மேலும் பார்க்க

ஏமாற்றிய காதலன்; பிரிந்த இளம்பெண்ணுக்கு அடுத்தநாளே கிடைத்த 11 லட்சம் ரூபாய் - எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை பிரிந்த பெண்ணிற்கு அடுத்த நாளே, அவருடைய காதலன் கொடுத்த பரிசு மூலம் 14,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 11.62 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற... மேலும் பார்க்க

ஆந்திரா: கடலுக்குச் சென்ற மீனவரை இழுத்துச் சென்ற 200 கிலோ கருப்பு மார்லின் மீன்; என்ன நடந்தது?

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், புடிமடகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சோடபள்ளி யெரய்யா என்ற மீனவர், 200 கிலோ எடையுள்ள கருப்பு மார்லின் மீனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம்... மேலும் பார்க்க