செய்திகள் :

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டம் மாற்றம்! திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

post image

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டத்தை திமுக அரசு மாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், ஒரு தனியார் விடுதியில் கடலூர் விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோர், பொதுநலச் சங்கத்தினரையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளையும் பெற்றுக் கொண்டார்.

அவர்களுடன் பேசுகையில், என்னுடைய ஆட்சியில் நான்காண்டு காலத்தில் புயல், வறட்சி, கரோனா என 3 இக்கட்டான சூழ்நிலைகள் அமைந்தன. இருப்பினும், அத்தகைய சூழ்நிலைகளை சிறப்பாக சமாளித்து, அரசின் வருவாய் மூலம் சிறப்பான ஆட்சி மேற்கொள்ளப்பட்டது. என்னுடைய ஆட்சியில் பிரச்னைகளை சந்தித்தபோதிலும், மக்கள் குறையில்லாமல் வாழ்ந்தனர்.

அதிமுக ஆட்சியில் ஆட்சியர் அலுவலகத்துக்கான இடத்தை பேருந்து நிலையத்துக்காக தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இப்போது நகரின் மையப்பகுதியில் இருக்கவேண்டிய பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது.

மக்கள் விரும்பும் இடத்தைவிட்டு, மாற்றிடத்தில் பேருந்து நிலையம் அமைப்பது கண்டிக்கத்தக்கது. மக்களுக்காக மட்டுமே ஆட்சியும் ஆட்சியாளர்களும் இருக்கவேண்டுமே தவிர, ஆட்சியாளர்களுக்காக மக்கள் இருக்கக் கூடாது.

அதிமுகவின் திட்டம் என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்தத் திட்டத்தை ஸ்டாலின் அரசு மாற்றுவது சரியானதல்ல. இதனால், வருகிற செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 15) பேருந்து நிலையம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

விவசாயம் செழித்தால்தான், அனைத்து தொழிலும் செழிக்கும். அடிப்படையில் நான் ஒரு விவசாயி. இன்றும் நான் விவசாயம் செய்து வருகிறேன். கனமழை வெள்ளத்தால் கடலூரில் வேளாண் தொழில் பாதிக்கப்பட்டது. இருப்பினும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

கரோனா காலகட்டத்தில் அரசுக்கு எந்தவிதமான வருமானம் இல்லாதபோதிலும், ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது.

என்னுடைய ஆட்சியிலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும் போதைப் பொருள்கள். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே மாநிலம் வளர்ச்சியடையும்.

அனைத்து தரப்பிலான மக்களும் திருப்தியடையும் ஆட்சியை வழங்குவதுதான் எங்கள் நோக்கம். வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?

Stalin govt change the plan brought by the ADMK says EPS

அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக குற்றச்சாட்டு!

வேலூரில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து வந்த பெண் தற்கொலை சம்பவத்தில் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14-ல் வெளியீடு!

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் https:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tan... மேலும் பார்க்க

தவெக ஆர்ப்பாட்டத்துக்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி

சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல்வேறு கட்சியினர் கண்டனம்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புகார்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலையை, மெழுகு அச்சு எடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஏகாம்பரநாதர் கோயிலில் விசாரணை நடத்தினர்.மெழுது அச்சு எட... மேலும் பார்க்க

உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை! முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

செஞ்சி கோட்டையை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது மகிழ்ச்சியளித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கிழக்கின் ட்ராய்" என்றழைக்கப்படும் செஞ்சி ... மேலும் பார்க்க

செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கிழக்கின் ட்ராய் என அறியப... மேலும் பார்க்க