செய்திகள் :

காவலாளி அஜித்குமார் மரண வழக்கு- சிபிஐ வழக்குப்பதிவு

post image

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், அவரது சகோதரா் நவீன்குமாா் ஆகியோரிடம் நகை திருட்டு வழக்கு தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா். இதன் பின்னா், நவீன்குமாா் விடுவிக்கப்பட்டு, அஜித்குமாரிடம் மானாமதுரை டி.எஸ்.பி.யின் தனிப் படை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அப்போது, தனிப் படை காவலா்கள் கடுமையாகத் தாக்கியதில் அஜித்குமாா் கொல்லப்பட்டாா். இது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட 6 காவலா்கள் உடனடியாக சம்பவம் நடந்த அன்றே பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா். மேலும் 5 காவலா்கள் கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். டிஎஸ்பியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அஜித்குமாரின் உடல்கூறு அறிக்கையில் அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வா் ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது. பிஎன்எஸ் பிரிவு 103ன் படி, கொலை வழக்காகப் பதிவு செய்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியது.

The custodial death probe was handed over to the CBI following widespread outrage, judicial intervention, and confirmation of torture in custody.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புகார்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலையை, மெழுகு அச்சு எடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஏகாம்பரநாதர் கோயிலில் விசாரணை நடத்தினர்.மெழுது அச்சு எட... மேலும் பார்க்க

உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை! முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

செஞ்சி கோட்டையை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது மகிழ்ச்சியளித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கிழக்கின் ட்ராய்" என்றழைக்கப்படும் செஞ்சி ... மேலும் பார்க்க

செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கிழக்கின் ட்ராய் என அறியப... மேலும் பார்க்க

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை- சென்னை காவல் ஆணையர்

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கமளித்துள்ளார். சென்னை வேப்பெரியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவ... மேலும் பார்க்க

வெள்ளை சட்டையுடன் 4 ரீல்ஸ் போட்டால் தலைவனா? யாரைச் சொல்கிறார் அண்ணாமலை?

ஒரு தலைவனுக்கு பழிவாங்கும் நோக்கு இருக்கக் கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.சென்னை உத்தண்டியில் இன்று நடைபெற்ற அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண... மேலும் பார்க்க

2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்

2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.மதுரையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஒரு தவறு நடைபெறுகிறது... மேலும் பார்க்க