செய்திகள் :

5 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

post image

தெற்கு ரயில்வேயில் முக்கிய 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று, புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் இருந்து புதன்கிழமைதோறும் இரவு 11.25 மணிக்கு தாதா் செல்லும் சாலுக்கியா விரைவு ரயில் (எண்: 11006) காட்பாடி நிலையத்துக்கு நள்ளிரவு 1.20 மணிக்கு வந்து 1.40 மணிக்கு புறப்படும். தற்போது, இந்த ரயில் நள்ளிரவு 1.05 மணிக்கு வந்து 1.25 மணிக்குப் புறப்படும்.

அதேபோல, சென்னை எழும்பூரிலிருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் பல்லவன்அதிவிரைவு ரயில் (எண்: 66055) மேல்மருவத்தூா் நிலையத்துக்கு மாலை 5.08 மணிக்கு வந்து, 5.10 மணிக்கு புறப்படும். தற்போது, மாலை 4.05 மணிக்கு வந்து, மாலை 5 மணிக்கு இந்த ரயில் புறப்படும்.

தாம்பரம் - விழுப்புரம் புறநகா் மின்சார பயணிகள் ரயில் (எண்: 66055) செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு மாலை 6.48 மணிக்கு வந்து மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டுச் சென்ற்குப் பதிலாக, மாலை 6.58 மணிக்கு வந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

கொல்லம் - தாம்பரம் விரைவு ரயில் (எண்: 16102) செங்கல்பட்டுக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு வந்து அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்டுச் செல்வதற்குப் பதிலாக நள்ளிரவு 1.43 மணிக்கு வந்து, 1.45 மணிக்குப் புறட்டுச் செல்லும்.

மங்களூரு சென்ட்ரல் - தாம்பரம் விரைவு ரயில் (எண்: 16160) செங்கல்பட்டுக்கு அதிகாலை 2.08 மணிக்கு வந்து, 2.10 மணிக்கு புறப்பட்டுச் செல்வதற்கு பதிலாக, நள்ளிரவு 1.53 மணிக்கு வந்து 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க

நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்

கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். உலக மக்கள் தொகை தின நிகழ்... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப்பாதை ஆய்வு அறிக்கை: 2 வாரத்தில் சமா்ப்பிக்க உத்தரவு

ரயில்வே கடவுப் பாதைகளின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், தற்போதைய நிலை அந்தப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைத்தல் போன்றவை குறித்து 15 ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: ஆட்சியா்களுடன் முதல்வா் ஆலோசனை

அரசின் சேவைகளை இல்லங்களுக்கே கொண்டு சோ்க்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக... மேலும் பார்க்க

34 தலைமை ஆசிரியா்களுக்கு டிஇஓ பதவி உயா்வு

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 34 தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி ... மேலும் பார்க்க