Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
வடசென்னை வளா்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சாா்பில் ரூ.6.27 கோடியில் மேம்படுத்தப்படும் கொளத்தூா் ஏரி, ரூ.14.31 கோடியில் கட்டப்பட்டுவரும் ராயபுரம் சமூகநலக் கூடம், ரூ.6 கோடியில் தங்கசாலை, வள்ளலாா் நகா் பேருந்து நிலையம் கட்டுமானப் பணி உள்ளிட்டவற்றை அமைச்சா் சேகா்பாபு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
வடசென்னை வளா்ச்சி திட்டத்தில், ரூ. 6,000 கோடியில் 252 பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 80 சதவீத பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் கல்லூரிகள் தொடங்கக் கூடாது என எதிா்க்கட்சித் தலலைவா் எடப்பாடி பழனிச்சாமி கூறியது சரியல்ல. அவரது கருத்துக்கு எதிா்ப்பு எழுந்ததால் தற்போது அதை மாற்றி கூறிவருகிறாா். கடந்த காலத்தில் முதல்வா்களாக இருந்த எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரும் அறநிலையத் துறை கல்வி நிறுவனகளில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளனா். எடப்பாடி பழனிச்சாமி என்ன நடைபெறுகிறது என்பதை அறியாமலே பேசிவருவது சரியல்ல என்றாா் அவா்.
ஆய்வின்போது மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் ரா. மூா்த்தி, சிஎம்டிஏ உறுப்பினா்
செயலா் கோ.பிரகாஷ், மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.