செய்திகள் :

``மாநில சுயாட்சி என்று உரிமை பேசும் முதல்வர் வழக்கை CBI-யிடம் ஏன் கொடுத்தார்?'' - சீமான் கேள்வி

post image

சமீபத்தில் தமிழகத்தையே அதிர வைத்த காவல்துறையினரின் சித்திரவதையால் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணமடைந்ததற்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் நடந்த ஆர்பாட்டாத்தில் கலந்துகொள்ள வந்த சீமான், அதற்கு முன் அஜித்குமாரின் வீட்டுக்கு சென்று, படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருஙகிணைப்பாளர் சீமான், தன் தாயார் மூலம் அஜித்குமாரின் தாயாருக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது சீமானின் தாயார் அன்னம்மாள், அஜித்தின் தாயார் மாலதியை கட்டியணைத்து அழுதபடி ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "ஒரு இளைஞனை போலீசார் அடித்தே கொலை செய்துள்ளனர். புகார் அளித்த நிகிதா மீது பல மோசடிப்புகார்கள் இருந்தும் அவரை ஏன் கைது செய்யவில்லை? நிகிதாவுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. உத்தரவு பிறப்பித்த அந்த உயர் அதிகாரி யார்? அவர் மீது ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?

தன் தாயாருடன் சென்று அஞ்சலி செலுத்திய சீமான்

மாநில சுயாட்சி என்று மாநில உரிமை பேசும் முதல்வர் ஏன் வழக்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சி.பி.ஐ-யிடம் கொடுத்தார்? முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை மீது நம்பிக்கை இல்லையா? முதல்வர் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறாரா?

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முதல்வர் வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றியுள்ளார். யார் அடிக்க சொன்னார்கள் என்பதை அடித்த 5 காவலர்களிடம் விசாரித்தாலே தெரிந்துவிடுமே.

என்ன தவறு செய்தாலும் அதற்கு பணம் கொடுத்து சரிகட்டலாம் என்று நினைப்பவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்" என்றார்.

``75 வயதாகிவிட்டால் ஒதுங்கியிருக்க வேண்டும்..." - மோகன் பகவத் பேச்சுக்கு காங்கிரஸின் ரியாக்‌ஷன்?

கடந்த புதன்கிழமை நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ``உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டது என்றால், நீங்கள் உங்கள் பொறுப்பில... மேலும் பார்க்க

மதிமுக: ``8 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்றால்..." - தொகுதிப் பங்கீடு குறித்து துரை வைகோ!

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தொகுதிப் பங்கீடு குறித்தும், அதிமுக வைகைச்செல்வன் வைகோவை `வைகோ பொய்கோ' என விமர்சித்தது உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளுக்கு திருச்சி எம்.பி-யும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளருமான... மேலும் பார்க்க

`குப்பை டெண்டரில் கைமாறிய லஞ்சத்தால் புதுச்சேரியில் துர்நாற்றம் வீசுகிறது’ - அரசை சாடும் திமுக

புதுச்சேரி அரசுக்கு அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, ``புதுச்சேரி முழுவதும் `ஸ்வச்தா கார்ப்பரேஷன்’ மூலம் குப்... மேலும் பார்க்க

'ஆர்ப்பாட்டம்... வார் ரூம்... மாநாடு' - வேகமெடுக்கும் விஜய்; அலர்ட் மோடில் உளவுத்துறை!

'பனையூர் அப்டேட்ஸ்!'திமுகவும் அதிமுகவும் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில், அடி மேல் அடி வைத்து நகர்ந்து கொண்டிருந்த விஜய்யின் தவெகவும் அரசியல் சூட்டை உணர்ந்து இப்போது கொஞ்சம் வேகமெடுக்க ஆரம்பித்த... மேலும் பார்க்க