செய்திகள் :

`குப்பை டெண்டரில் கைமாறிய லஞ்சத்தால் புதுச்சேரியில் துர்நாற்றம் வீசுகிறது’ - அரசை சாடும் திமுக

post image

புதுச்சேரி அரசுக்கு அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம்

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, ``புதுச்சேரி முழுவதும் `ஸ்வச்தா கார்ப்பரேஷன்’ மூலம் குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. புதுச்சேரி முழுவதும் குப்பைத் தொட்டிகளை வைத்த அந்த நிறுவனம், அதில் பொதுமக்கள் கொட்டிய குப்பைகளை எடுத்துச் சென்று குப்பைக்கிடங்கில் குவித்து வந்தது.

அதன்பிறகு அந்தக் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக, பழைய பொருட்களாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யப்படவில்லை. அதனால் குப்பைகள் சேகரிக்கப்பட்ட குருமாம்பேட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி அரசுக்கு அபராதமும் விதித்தது தீர்ப்பாயம்.

ஸ்வச்தா கார்ப்பரேஷன் குப்பைகளை தரம் பிரிக்காவிட்டாலும், தெருக்களில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியை ஓரளவு செய்து வந்தது. அந்த நிறுவனத்தின் ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்ட நிலையில், புதிதாக டெண்டர் விடப்பட்டது.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

அதில் அனுபவம் வாய்ந்த பல பெரிய நிறுவனங்கள் பங்கேற்று இருந்த நிலையில், போதிய முன் அனுபவம் இல்லாத `கிரீன் வாரியர்’ என்ற நிறுவனத்தை உள்ளாட்சித்துறை தேர்வு செய்தது. இந்த விவகாரத்தில் பல கோடி லஞ்சம் கைமாறியதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருக்கிறது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது புதுச்சேரி முழுவதும் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. கைமாறிய லஞ்சத்தாலும், ஆட்சியாளர்களின் அதிகாரப் போட்டியாலும் ஆட்சியாளர்கள் குப்பை பிரச்னையை கண்டுகொள்ளவில்லை.

புதிய நிறுவனம் தொட்டிகளை வைக்காமல், வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த வீட்டிற்கும் சென்று இவர்கள் குப்பைகளை சேகரிக்கவில்லை. ஏற்கெனவே குப்பைத் தொட்டிகள் இருந்த இடங்களில், சில இடங்களில் மட்டுமே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

புதுச்சேரி முழுக்க வீசும் துர்நாற்றம்

அதனால் ஏற்கனவே குப்பை தொட்டிகள் இருந்த இடத்தில் மக்கள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். தெரு நாய்களும், மாடுகளும் அந்தக் குப்பைகளை உணவிற்காக கிளறுவதால், புதுச்சேரி முழுக்க துர்நாற்றம் வீசுகிறது. அதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.

குப்பை அகற்றும் பணிக்கான டெண்டரில் என்னென்ன நிறுவனங்கள் கலந்து கொண்டன ? அதில் எதனடிப்படையில் கிரீன் வாரியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது ? அந்த நிறுவனம் என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் ? அதாவது வீடுகள் தோறும் சென்று குப்பை சேகரிக்க வேண்டுமா ?

அதற்கு எவ்வளவு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்க வேண்டும் ? தினமும் எந்த நேரத்தில் அவர்கள் வீடுகளுக்கு வந்து குப்பைகளை அகற்றுவார்கள் ? தற்போது சில இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருப்பது ஏன் ? மீண்டும் அனைத்து இடத்திலும் குப்பை தொட்டிகள் வைக்கப்படுமா ?

குப்பை | கோப்புப் படம்

அல்லது தற்போது வைத்துள்ள இடங்களில் இருந்தும் குப்பை தொட்டிகள் எடுக்கப்பட்டு விடுமா? ஸ்வச்தா கார்ப்பரேஷனுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது ? அவர்கள் என்னென்ன பணிகளை செய்தனர் ? கிரீன் வாரியார் நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது ?

அவர்கள் ஸ்வச்தா கார்ப்பரேஷனை விட கூடுதலாக என்னென்ன பணிகளை செய்வார்கள் போன்ற அனைத்து விவரங்களையும் மக்களுக்கு உள்ளாட்சித்துறை தெரிவிக்க வேண்டும். அத்துடன் புதுச்சேரி முழுக்க உரிய முறையில் குப்பை அகற்றும் பணியை உடனே மேற்கொள்ள வேண்டும்.

இல்லையெனில் அதிகார போட்டி நடத்தும் இந்த அரசையும், உள்ளாட்சித்துறையையும் கண்டித்து மக்களே போராட்டங்களை நடத்துவார்கள். தி.மு.க அதற்கு துணையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

``75 வயதாகிவிட்டால் ஒதுங்கியிருக்க வேண்டும்..." - மோகன் பகவத் பேச்சுக்கு காங்கிரஸின் ரியாக்‌ஷன்?

கடந்த புதன்கிழமை நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ``உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டது என்றால், நீங்கள் உங்கள் பொறுப்பில... மேலும் பார்க்க

மதிமுக: ``8 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்றால்..." - தொகுதிப் பங்கீடு குறித்து துரை வைகோ!

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தொகுதிப் பங்கீடு குறித்தும், அதிமுக வைகைச்செல்வன் வைகோவை `வைகோ பொய்கோ' என விமர்சித்தது உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளுக்கு திருச்சி எம்.பி-யும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளருமான... மேலும் பார்க்க

'ஆர்ப்பாட்டம்... வார் ரூம்... மாநாடு' - வேகமெடுக்கும் விஜய்; அலர்ட் மோடில் உளவுத்துறை!

'பனையூர் அப்டேட்ஸ்!'திமுகவும் அதிமுகவும் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில், அடி மேல் அடி வைத்து நகர்ந்து கொண்டிருந்த விஜய்யின் தவெகவும் அரசியல் சூட்டை உணர்ந்து இப்போது கொஞ்சம் வேகமெடுக்க ஆரம்பித்த... மேலும் பார்க்க

`அறநிலையத்துறை கல்லூரி தொடங்கக் கூடாது என நான் கூறவில்லை’ - எடப்பாடி பழனிசாமி ஓப்பன் டாக்

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இர... மேலும் பார்க்க