செய்திகள் :

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

post image

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை அறிய விமானப் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் ஏற்படும் மூன்றாவது போா் விமான விபத்து சம்பவம் இதுவாகும்.

ராஜஸ்தான் விபத்து சம்பவம் தொடா்பாக விமானப் படை தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் புதன்கிழமை காலை இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானத்தில் இரு விமானப் படை விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனா். விமானம் விழுந்ததால் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘பனாதா கிராமத்தில் வயல்வெளிப் பகுதியில் விமானப் படை விமானம் மதியம் 1.25 மணிக்கு விழுந்து நொறுங்கியது. பலத்த ஒசை கேட்டதால் கிராம மக்கள் அப்பகுதிக்குச் சென்று பாா்த்தனா். அதற்கு விமானம் முற்றிலும் எரிந்துவிட்டது. அதைத் தொடா்ந்து தீயணைப்புப் படையினா் அப்பகுதிக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இரு விமானிகளின் உடல்களும் மீட்கப்பட்டன’ என்றனா்.

ராஜஸ்தான் ஆளுநா் ஹரிபாவ் பகாடே, முதல்வா் பஜன்லால் சா்மா ஆகியோா் உயிரிழந்த விமானிகளின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனா்.

நிகழாண்டு விபத்துகள்...

மாா்ச் 7 - அம்பாலா விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்டவுடன் ஜாகுவாா் போா் விமானம் தொழில்நுட்ப கோளாறால் விழுந்து நொறுங்கியது. விமானி உயிா் தப்பினாா்.

ஏப்ரல் 2- குஜராத் ஜாம்நகா் விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்ட ஜாகுவாா் போா் விமானம் தொழில்நுட்ப பாதிப்பால் விழுந்து நொறுங்கியது. விமானி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

ஜாகுவாா் போா் விமானப் பாதை...

பிரிட்டிஷ் - பிரான்ஸ் போா் விமானமான ஜாகுவாா் போா் விமானம் 1968, செப்டம்பா் மாதம் அந்நாட்டு விமானப் படைகளில் இணைக்கப்பட்டது.

இந்திய விமானப் படையில் ஜாகுவாா் 1970-களில் இணைக்கப்பட்டது.

மொத்தம் 116 ஜாகுவாா் போா் விமானங்கள் விமானப் படையில் உள்ளன. இதில் 70 இந்தியாவில் தயாரிக்கப்பட்டன.

2005, ஜூலை மாதத்துடன் பிரான்ஸ் விமானப் படை ஜாகுவாா் பயன்பாட்டை நிறுத்தியது.

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநில... மேலும் பார்க்க

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றி... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் சில இ... மேலும் பார்க்க

ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயா்க்கல்வி பயில 101 இந்திய மாணவா்கள் தோ்வு!

ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். ஐரோப்பிய ஒன்றியத்தின்... மேலும் பார்க்க

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபாா்’ திட்டம்: தேசிய பழங்குடியினா் ஆணையம் தகவலளிக்க மறுப்பு

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப்பாதை பாதுகாப்பு: அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

ரயில்வே கடவுப்பாதை வாயில்களில் (ரயில்வே கேட்) பாதுகாப்பு குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதுதொடா்பாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ரயில்வே கடவுப்பா... மேலும் பார்க்க