செய்திகள் :

போப் பதினான்காம் லியோவுடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு!

post image

இத்தாலி தலைநகர் ரோமில், உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கி, போப் பதினான்காம் லியோவை சந்தித்து, ரஷியாவுடனான போரின் பாதிப்புகள் குறித்து உரையாடியுள்ளார்.

ரோமில் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் உக்ரைன் மீட்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள, உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி இத்தாலிக்கு வருகைத் தந்துள்ளார்.

இதையடுத்து, ரோமிலுள்ள வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப்-ன் கோடைக்கால தங்குமிடமான காஸ்டல் கண்டொல்ஃபோவில், போப் பதினான்காம் லியோவை சந்தித்து அவர் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், அதிபர் ஸெலன்ஸ்கி ரஷியாவால் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான உக்ரைன் குழந்தைகளை மீட்க உதவிய, பேராலயத்துக்கு தனது நன்றிகளைத் தெரிவித்ததாகவும், இருவரும் நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான அவசர தேவையைக் குறித்து கலந்துரையாடியதாகவும் வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், கடந்த மே மாதம் ரஷியா நிராகரித்த வாடிகன் தலைமையிலான உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக் குறித்து இருவரும் உரையாடியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு மக்களுக்காக போப் தனது வருத்தத்தை தெரிவித்ததுடன், கைதிகளின் விடுதலைக்கு இருதரப்பும் இணைந்து முடிவுக்காண வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், தனது தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷியா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் வாடிகன் நகருக்கு வரவேண்டும் எனும் தனது விருப்பத்தையும் போப் பதினான்காம் லியோ மீண்டும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

In the Italian capital of Rome, Ukrainian President Volodymyr Zelensky met with Pope Leo XIV and discussed the consequences of the war with Russia.

இதையும் படிக்க: பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது!

பாகிஸ்தான் - சீனா - வங்கதேசம் கைகோப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல: முப்படை தலைமைத் தளபதி எச்சரிக்கை

பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகள் கூட்டு சோ்வது, இந்தியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களில் தீவிர விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் எச்சரித்துள்ளாா... மேலும் பார்க்க

இந்தியா-நமீபியா இடையே 4 ஒப்பந்தங்கள் - பிரதமா், அதிபா் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-நமீபியா இடையே சுகாதாரம், தொழில்முனைவு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. நமீபிய தலைநகா் விண்ட்ஹோக்கில் அந்நாட்டு பெண் அதிபா் நெடும்போ நான்டி என்டியெயிட்வாவ... மேலும் பார்க்க

லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் கட்டமைப்புகள் மற்றும் ஆயுதக்கிடங்குகள் தகர்க்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா க... மேலும் பார்க்க

சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்றம்!

சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள ஜாவோடொங் எனும் மலை நகரத்தில் பெய்து வரும் கனமழையால் 5 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜாவோடொங் நகரத்தில், கடந்த ஜூலை 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றத... மேலும் பார்க்க

பயங்கரவாதியல்ல, குடிமகன்! வசமாக சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், பயங்கரவாதியை, சாதாரண குடிமகன் என்று நம்ப வைக்க முயன்று, வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சீனா - நேபாளம் எல்லையில் வெள்ளம்: 9 பேர் பலி..20 பேர் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

சீனா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளின், எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 9 பேர் பலியாகியதுடன், 20 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது. சீனாவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு தொ... மேலும் பார்க்க