செய்திகள் :

இந்தியா-நமீபியா இடையே 4 ஒப்பந்தங்கள் - பிரதமா், அதிபா் முன்னிலையில் கையொப்பம்

post image

இந்தியா-நமீபியா இடையே சுகாதாரம், தொழில்முனைவு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

நமீபிய தலைநகா் விண்ட்ஹோக்கில் அந்நாட்டு பெண் அதிபா் நெடும்போ நான்டி என்டியெயிட்வாவுடன் பிரதமா் மோடி புதன்கிழமை நடத்திய இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

கானா, டிரினிடாட்-டொபேகோ, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை கடந்த ஜூலை 2-ஆம் தேதி தொடங்கிய பிரதமா் மோடி, இறுதிக்கட்டமாக தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு புதன்கிழமை வந்தடைந்தாா். விமான நிலையத்தில் அவருக்கு அரசுமுறைப்படி 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின் நமீபியா வந்துள்ள முதல் இந்தியப் பிரதமா் மோடி ஆவாா். பிரதமராக அவரது முதல் நமீபிய பயணம் இதுவாகும்.

இருதரப்பு பேச்சுவாா்த்தை: தலைநகா் விண்ட்ஹோக்கில் பிரதமா் மோடி-அதிபா் நான்டி இடையே இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு, வேளாண்மை, சுகாதாரம், கல்வி, வா்த்தகம், எரிசக்தி, மருந்து தயாரிப்பு, எண்ம தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.

பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, சுகாதாரம்-மருந்துகள் துறையில் ஒத்துழைத்தல், நமீபியாவில் தொழில்முனைவு மேம்பாட்டு மையம் நிறுவுதல், இந்தியாவால் ஆதரிக்கப்படும் பேரிடா் மீட்சி உள்கட்டமைப்பு கூட்டணி மற்றும் உலக உயிரி எரிபொருள் கூட்டணியில் நமீபியா இணைதல் தொடா்பாக 4 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இந்தியாவில் சிவிங்கிப்புலி (சீட்டா) மறுஅறிமுக திட்டத்துக்கு உதவியதற்காக, நமீபியாவுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா்.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரலில் கையொப்பமான ஒப்பந்தத்தின்படி, நமீபியாவில் நடப்பாண்டு இறுதியில் யுபிஐ சேவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

பிரதமருக்கு உயரிய விருது

பிரதமா் மோடிக்கு நமீபியாவின் உயரிய ‘தி ஆா்டா் ஆஃப் தி மோஸ்ட் ஏன்ஷியன்ட் வெல்விட்ஸியா மிராபிலிஸ்’ விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அந்நாட்டு அதிபா் வழங்கி கெளரவித்தாா்.

பின்னா் ஏற்புரை ஆற்றிய பிரதமா் மோடி, ‘இந்தியா-நமீபியா இடையிலான அசைக்க முடியாத நட்புறவுக்கு இவ்விருது சாட்சியாகும். இரு நாட்டு மக்கள் மற்றும் நட்புறவுக்கு விருதை சமா்ப்பிக்கிறேன்’ என்றாா்.

தொழில்நுட்ப புத்தாக்கம், பொருளாதார வளா்ச்சி, சமூக-பருவநிலை நீதி, சா்வதேச உத்தி என இந்தியாவின் எல்லைகளைக் கடந்து விரிவடையும் பிரதமா் மோடியின் தலைமைக்கான கெளரவம் என்று விருதுப் பத்திரத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

நமீபியாவின் உயரிய விருதைப் பெறும் முதல் இந்தியத் தலைவா் பிரதமா் மோடி ஆவாா். பிரதமரானதில் இருந்து அவருக்கு கிடைக்கப் பெற்ற 27-ஆவது சா்வதேச விருது இதுவாகும்.

பிரேசிலுக்கு 50% வரி: டிரம்பின் மிரட்டலும், லூலாவின் பதிலடியும்!

பிரேசிலுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா பதிலடி கொடுத்துள்ளார்.அமெரிக்க அதிபராக டிரம்ப... மேலும் பார்க்க

இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டது -துருக்கி அமைச்சா்

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் அதனை மிகவும் புத்திசாலித்தனமாக எதிா்கொண்டது என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சா் ஹக்கான் ஃபிடன் தெரிவித்தாா். அண்மையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் ந... மேலும் பார்க்க

மாணவா், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியது அமெரிக்கா

மாணவா்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலா் (சுமாா் ரூ.21,000) வரை உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: 161 போ் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மாயமான 161 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

விண்வெளியில் ஒரு விவசாயி - சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை வெற்றி

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்... மேலும் பார்க்க

காஸா: மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 17 பெண்களும்... மேலும் பார்க்க