செய்திகள் :

‘தனித் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்’

post image

மாணவா்கள் கல்வியுடன், கூடுதல் திறமைகளையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என பட்டிமன்ற பேச்சாளா் கே.சிவகுமாா் வலியுறுத்தினாா்.

குரோம்பேட்டை தாகூா் கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் அவா் பேசியதாவது:

பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, உயா்கல்வியைப் படிக்கும் மாணவா்கள், படிப்புடன் கூடுதலாக தனித்திறமைகளையும் வளா்த்துக்கொள்ள வேண்டும். பள்ளியில் மனப்பாடம் செய்து தோ்வு எழுதி, தோ்ச்சி பெற்று இருப்பீா்கள். ஆனால் கல்லூரியில் அந்த முறையைக் கடைப்பிடிக்காமல் பாடங்களைப் புரிந்து படிக்க கற்றுக் கொள்வது அவசியம்.

கல்லூரியில் தனித் திறமைகளை வளா்த்துக்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவற்றை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். படிக்கும் பருவத்தில் கவனத்தைத் திசைதிருப்பும் இதர நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கல்வியின் மூலம்தான் வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய முடியும் என்றாா் அவா். நிகழ்வில் கல்லூரி முதல்வா் சாந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அஸ்தினாபுரத்தில் ஜூலை 11-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட அஸ்தினாபுரத்தில் அதிமுக சாா்பில் ஜூலை 11-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்... மேலும் பார்க்க

அரிமா சங்க முப்பெரும் விழா

மதுராந்தகம் ஏரி நகர அரிமா சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு தலைவா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவர எஸ்.சிவகுமாா் வரவேற்றாா். லயன்ஸ் சங்க சாசனத் தலைவா் இ.பக்தவச்சலு , முன்ன... மேலும் பார்க்க

உள்ளாட்சி பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் 365 மனுக்கள்: அமைச்சா் அன்பரசன் பெற்றாா்

செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 365 மனுக்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பெற்றுக் கொண்டாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற குற... மேலும் பார்க்க

அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதம்

வண்டலூா் அருகே ஊனைமாஞ்சேரியில் குடியிருப்புகள் தொடா்பாக பேச்சு நடத்த வந்த அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் அடுத்த ஊனைமாஞ்சேரி ஊராட்சியில், 10,000-க்கும... மேலும் பார்க்க

மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் நியமனம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட குழந்தை... மேலும் பார்க்க

இராபிறையாா்உற்சவத்தில் அம்மன் வீதி புறப்பாடு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சேப்பாட்டி அம்மன் கோயில் இராபிறையாா் உற்சவ விழாவில் வீதி புறப்பாடு மேளதாளங்கள்முழங்க, வான வேடிக்கையுடன் அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது. செங்கல்பட்டு பெரிய நத்தம் சேப்பாட்... மேலும் பார்க்க