செய்திகள் :

வட கொரியாவுக்கு ஸ்கெட்ச் போடும் 3 நாடுகள்! துணைநிற்கும் ரஷியா!

post image

வட கொரியாவுக்கு எதிரான போர் ஒத்திகை நடவடிக்கைக்கு ரஷியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்துவதால், அவ்வப்போது பதற்றத்தைத் தூண்டுகின்றது.

இந்த நிலையில் தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் ஒன்றாக சேர்ந்து கூட்டுப் போர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 3 நாடுகளின் ஒத்திகை நடவடிக்கையானது, தங்களுக்கு எதிரானது என்று வட கொரியா கருதுகிறது. மேலும், போர் ஒத்திகையைக் கைவிடக் கோரி, வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்த நிலையில், வட கொரியாவுக்கு சென்றிருந்த ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவும், வட கொரியாவுக்கு எதிரான போர் ஒத்திகையை கைவிட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷியா - வட கொரியா இடையிலான நட்புறவு தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், இரு நாடுகளும் தங்களுக்குள்ளாக பல்வேறு உதவிகளை மாற்றிக் கொள்கின்றனர்.

ரஷியா வழங்கும் ராணுவ மற்றும் பொருளாதார உதவிக்கு ஈடாக, உக்ரைனுடனான போரில் ரஷியாவுக்கு வீரர்களையும் வெடிபொருள்களையும் வட கொரியா வழங்கி வருகிறது. இதனிடையே, தங்களின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களின் தொழில்நுட்பங்களையும் வட கொரியாவுக்கு ரஷியா வழங்குமா? என்ற கவலையும் எழுகிறது.

இதையும் படிக்க:திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!

Russia warns US, South Korea, Japan against alliance targeting North Korea

இஸ்ரேல் தாக்குதல்: ராஃபாவில் 3 மாதங்களில் 28,500 கட்டடங்கள் தகர்ப்பு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 19 பேர் இன்று (ஜூலை 13) கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) காலை முதல் இஸ்ரேல்... மேலும் பார்க்க

கழிப்பறையில் புகைப்பிடித்த இளம் ஜோடியால் 17 மணி நேரம் தாமதமான விமானம்!

மெக்ஸிகோவில் இருந்து லண்டன் சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் கழிப்பறையில் இளம் ஜோடி ஒன்று, வெளியே வராமல் தொடர்ந்து புகைப்பிடித்துக்கொண்டிருந்ததால், விமானப் பயணம் 17 மணி நேரம் தாமதமானது.விமான ஊழியர்கள் ... மேலும் பார்க்க

உள்ளூர் விமானம் என நினைத்து செளதி சென்ற பாகிஸ்தான் இளைஞர்!

பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்ளூர் விமானம் என நினைத்து, செளதி அரேபியா சென்ற சம்பவம் பலரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.லாகூரில் இருந்து கராச்சி செல்ல, விமானம் இவ்வளவு நேரம் பறக்கிறதே என சக பயண... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 32 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவில் முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா். டேய்ா் அல்-பாலா நகரில் மட்டும் இஸ்ரேல் குண்டுவீச்சில் 13 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில... மேலும் பார்க்க

எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்

ஈரான் தலைநகா் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனா்; சிலா் தப்பியோடினா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. இது கு... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 129-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க