செய்திகள் :

Assam: "இன்று முதல் எனக்கு விடுதலை" - மனைவியிடமிருந்து விவாகரத்து; 40 லிட்டர் பாலில் குளித்த கணவர்

post image

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவர் தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றதை, 40 லிட்டர் பாலில் குளித்துக் கொண்டாடும் வீடியோ வைரலாகியிருக்கிறது.

இந்த வீடியோ குறித்து வெளியான தகவலின்படி, அந்த வீடியோவில் வருபவரின் பெயர் மாணிக் அலி (32).

இவர் நல்பாரி மாவட்டத்தில் முகல்முவா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.

மாணிக் அலி
மாணிக் அலி

மாணிக் அலி தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறுவதற்குத் தயாராக இருந்தார்.

இந்த நிலையில்தான், தனது மனைவியிடமிருந்து தனக்கு விவாகரத்து கிடைத்த செய்தியை தன் வழக்கறிஞர் மூலம் அறிந்திருக்கிறார்.

மாணிக் அலி அந்தச் சந்தோஷத்தில் 40 லிட்டர் பாலில் குளித்து விவகாரத்தைக் கொண்டாடியிருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில், "இன்று முதல் நான் விடுதலையடைந்துவிட்டேன்.

அவர் (மனைவி) தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தபோதும் குடும்பத்தின் அமைதிக்காக நான் மௌனமாக இருந்தேன்.

நேற்றுதான் என் வழக்கறிஞர், விவாகரத்து முடிவாகிவிட்டதாக என்னிடம் தெரிவித்தார்.

எனவேதான், என்னுடைய சுதந்திரத்தைக் கொண்டாட பாலில் குளிக்கிறேன்" என மாணிக் அலி பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஒடிசா: ரேபிஸ் தடுப்பூசி போட 20 கிமீ நடந்த 95 வயது மூதாட்டி... வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஒடிசா மாநிலம் முழுவதும், ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு, காவல்துறையால் ஓட்டுநர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஓட்டுநர்கள் கடந்த 8-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். அ... மேலும் பார்க்க

Odisha: கர்ப்பிணி பெண்ணை 10 கி.மீ தோளில் சுமந்த மக்கள்; மோசமான சாலையால் ஊருக்குள் வராத ஆம்புலன்ஸ்

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள போஜ்குதா கிராமத்தைச் சேர்ந்த சுனாய் போஜ் என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள சுகாதார மையத்தில் சுனாய் பெற்றோர் உ... மேலும் பார்க்க

கேரளா: 15 அடி ராஜநாகத்தை அசால்டாக பிடித்த பெண் - யார் இந்த ஜி.எஸ் ரோஷ்னி?

கேரளா வனத்துறையைச் சேர்ந்த ஜி.எஸ்.ரோஷ்னி என்ற பெண் வனத்துறை அதிகாரி 14-15 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை அசால்டாக பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இவரது வீடியோ வைரலாவது இது முதன்முறை அல்லது. பெரிய அளவிலன... மேலும் பார்க்க

5 ஆண்டுகள்... 5 மாநிலங்கள் - `785 பேரைக் கொன்ற மனைவிகள்!' - அச்சமூட்டும் `அதிர்ச்சி' தகவல்!

சமீப நாட்களில் நாம் கடந்து வரும் செய்திகள் திருமண செயல்பாடுகள் மீதே பல்வேறு கேள்விகளை எழச் செய்துள்ளன. வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.திருமணம் தாண்டிய உறவு, ஏமாற்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான மல்ஹோத்ரா; கேரள சுற்றுலாதுறை திட்டத்தில் பங்கேற்றது எப்படி?

ஹரியானாவைச் சேர்ந்த 33 வயது பயண வலைபதிவர் ஜோதி மல்வோத்ரா (Jyoti Malhotra) பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்கள் வழங்கியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வெளியான தகவலின்படி, பாகிஸ்தான் உளவாள... மேலும் பார்க்க

SF90: பெங்களூரில் வலம் வந்த ரூ7.5 கோடி மதிப்பிலான ஃபெராரி; ரூ1.41 கோடி அபராதம் விதித்த காவல்துறை!

ஃபெராரி இத்தாலியைச் சேர்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம். ரேஸ் கார்கள் தவிர, SF90 Stradale, SF90 ஸ்பைடர், என்ஸோ ஃபெராரி என்று பல சூப்பர் கார்களை விற்றுக் கொண்டிருக்கிறது ஃபெராரி. சமீபகாலமாக கர்நாடக... மேலும் பார்க்க