செய்திகள் :

5 ஆண்டுகள்... 5 மாநிலங்கள் - `785 பேரைக் கொன்ற மனைவிகள்!' - அச்சமூட்டும் `அதிர்ச்சி' தகவல்!

post image

சமீப நாட்களில் நாம் கடந்து வரும் செய்திகள் திருமண செயல்பாடுகள் மீதே பல்வேறு கேள்விகளை எழச் செய்துள்ளன. வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

திருமணம் தாண்டிய உறவு, ஏமாற்றுத் திருமணங்கள், பெண்களைக் கட்டாயப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பது உள்ளிட்டக் காரணங்களால் கணவர்களும் பாதிக்கப்படுவது அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டுகிறது சமீபத்தில் வெளியான செய்தியறிக்கை ஒன்று.

murder

கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் 5 மாநிலங்களில் மட்டும் 785 மனைவிகள் கணவரைக் கொலை செய்துள்ளதாக அந்த செய்திதளம் தெரிவிக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்ற ரகுவன்ஷி, ரகசிய உறவில் இருந்த அவரது மனைவியால் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார். இது நாடுமுழுவதும் பேசு பொருளானது.

மற்றொரு பிரபலமான வழக்கில் ஒரு பெண்மணி அவரது கணவரை கொலை செய்து ட்ரம்மில் உடலைப் போட்டு, அழுகும் வரை வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் குடித்துவிட்ட வந்த கணவரை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்றார் ஒரு மனைவி.

wedding
wedding

ஆண்கள் நடத்தும் அட்டூழியங்களும் இவை எதற்குமே சளைத்ததில்லை. லிவ்-இன் உறவுகளும் பாதுகாப்பானதென சொல்லிவிட முடியாத சூழல். இவற்றுடன் செலிபிரிட்டிகளின் உறவுகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்னைகள் வேறு...

இவையெல்லாம் சேர்ந்து திருமணம், காதல் என எந்தவொரு உறவிலும் ஈடுபடும் முன் பலமுறை சிந்திக்க வைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 785 கொலைகளும் வழக்காகப் பதிவு செய்யப்பட்டவை. பயம், சமூக அழுத்தம் அல்லது ஆதாரமில்லாததால் பல கதைகள் வெளிவராமல் இருக்கலாம்.

திருமணம் மட்டுமே ஒரு குடும்பத்தை உருவாக்கத் தேவையான பாதுகாப்பான அமைப்பு என்ற நிலை மாறிவருவதாகவே பார்க்கப்படுகிறது. இரு தரப்பினரிடையே புரிதல், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முதிர்ச்சி மற்றும் சமத்துவம் இருந்தால் மட்டுமே ஒரு கூரையின் கீழ் வாழ்வதென்பது சாத்தியமாகும்.

பொறுமையாக இரு, அட்ஜஸ்ட் செய்து போ, விட்டுக்கொடு என ஒருவர் மீது அழுத்தம் கொடுத்து நச்சு உறவில் தக்கவைக்க முயற்சிக்கும் அபத்தத்திலிருந்து சமூகம் தன்னை விடுவித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்பதையே இந்த அசம்பாவிதங்கள் நமக்கு கூறுகின்றன.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான மல்ஹோத்ரா; கேரள சுற்றுலாதுறை திட்டத்தில் பங்கேற்றது எப்படி?

ஹரியானாவைச் சேர்ந்த 33 வயது பயண வலைபதிவர் ஜோதி மல்வோத்ரா (Jyoti Malhotra) பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்கள் வழங்கியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வெளியான தகவலின்படி, பாகிஸ்தான் உளவாள... மேலும் பார்க்க

SF90: பெங்களூரில் வலம் வந்த ரூ7.5 கோடி மதிப்பிலான ஃபெராரி; ரூ1.41 கோடி அபராதம் விதித்த காவல்துறை!

ஃபெராரி இத்தாலியைச் சேர்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம். ரேஸ் கார்கள் தவிர, SF90 Stradale, SF90 ஸ்பைடர், என்ஸோ ஃபெராரி என்று பல சூப்பர் கார்களை விற்றுக் கொண்டிருக்கிறது ஃபெராரி. சமீபகாலமாக கர்நாடக... மேலும் பார்க்க

Custodial Death: ``நானும் அம்மாவும் அழுதுகொண்டே இருக்கிறோம்" - முனைவர் நிகிதா வெளியிட்ட ஆடியோ!

தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் அஜித் குமார் மரணம் தொடர்பான பரபரப்பு தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நீதிமன்றம் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதற்கிடையில், அஜித்குமார் மீது காவல் நிலைய... மேலும் பார்க்க

Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்கு கடும் எதிர்ப்பு!

ரஷ்யாவைச் சேர்ந்த பாக்ஸிங் வீராங்கனை அனஸ்தேசியா லுச்கினா (Anastasia Luchkina) கிரிமியாவில் உள்ள டைகன் சஃபாரி பார்க் என்ற வன விலங்கு பூங்காவில் ஓராங்குட்டான் குரங்குக்கு ஈ-சிகரெட் புகைக்கக் கொடுத்தது க... மேலும் பார்க்க

``ChatGPT உதவியால் ரூ.10 லட்சம் கடனை அடைத்துவிட்டேன்..'' - குடும்பத் தலைவியின் அனுபவப் பகிர்வு!

இப்போதைய உலகின் மந்திரச் சொல் 'AI, ChatGPT'. இதை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்தினால், நம்முடைய தினசரி நாளில் வெற்றிகரமான பல காரியங்களை சாதித்துக்கொள்ள முடியும். இதை அன்றாட தேவைகளுக்கு மட்டுமல்ல, ந... மேலும் பார்க்க

மகனுக்கு நகைகள் போட்டு அழகு பார்த்து உயிரை மாய்த்த குடும்பம்.. சொத்து பிரச்னையால் சோகம்

ராஜஸ்தானில் சொத்து பிரச்னையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது. அங்குள்ள பார்மர் என்ற இடத்தை சேர்ந்தவர் சிவ்லால்(35). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு பஜ்ரங்(9), ராம்தேவ்(8) ஆகிய இரண்டு மகன்கள்... மேலும் பார்க்க