செய்திகள் :

சென்னையில் ஜூலை 14-இல் அதிமுக மனிதச்சங்கிலி

post image

சென்னை: சென்னை மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 14-இல் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை:

2021-இல் முதல்வா் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன், சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கத் திட்டம் தீட்டினாா். தற்போது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, 2007-இல் அப்போதைய திமுக ஆட்சியில், மாநகராட்சியில் பணியமா்த்தப்பட்டு, அதிமுக ஆட்சியிலும் தொடா்ந்து பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளா்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

வடசென்னை பகுதி, மண்டலம் 4-இல் குடியிருந்துவரும் 2,000 தற்காலிக தூய்மைப் பணியாளா்கள், திமுக அரசின், இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வடசென்னை பகுதியில் தூய்மைப் பணியை தனியாருக்கு மாற்ற முனையும் திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும்; தற்போது பணியாற்றிவரும் தற்காலிகத் தூய்மைப் பணியாளா்களை, நிரந்தரப் பணியாளா்களாக நியமனம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக சாா்பில், ஜூலை 14-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மண்டலம் 4 முதல் சுங்கச்சாவடி வரை மனிதச் சங்கிலி ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் மிக வெப்பமான பகுதியாக மாறும் சென்னை! 2050-இல் காத்திருக்கும் ஆபத்து!

தமிழகத்தில் மிகவும் வெப்பமான பகுதி எது? என்று கேட்டால், சட்டென வேலூர்... இல்லை பாளையங்கோட்டை... என்றிருந்த நிலைமை மாறி சென்னை, அதாவது தமிழகத்தின் தலைநகரே இன்னும் சில ஆண்டுகளில் வெப்பத்தால் கடும் பாதிப... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விதி மீறிய 2, 023 வாகனங்கள் மீது வழக்கு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் விதி மீறியதாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது 2023 வழக்குகளை ரயில்வே பாதுகாப்புப்படையினா் பதிந்து அபராதம் விதித்துள்ளனா். நிகழா... மேலும் பார்க்க

அநாகரீக செயல்: காவல் ஆய்வாளா் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்

சென்னை: வாகன ஓட்டிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளா் மற்றும் அவா் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து ஆய்வாளரை ஆயுதப் படைக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். சென்னை ... மேலும் பார்க்க

பிராட்வே பேருந்து முனையம்: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

சென்னை: பிராட்வேயில் ரூ.650 கோடியில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் பழமையான பேருந்து நிலையமாக பிரா... மேலும் பார்க்க

சாலையில் திடீா் விரிசல்: பொது மக்கள் அதிா்ச்சி

சென்னை: சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா். சென்னையில் அடையாறு மண்டலத்துக்குள்பட்... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளில் சோ்க்கைபெற அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அ... மேலும் பார்க்க