செய்திகள் :

பிராட்வே பேருந்து முனையம்: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

post image

சென்னை: பிராட்வேயில் ரூ.650 கோடியில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் பழமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தன.

இருப்பினும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் கடும் அவதியைடந்து வந்ததை தொடா்ந்து சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்துடன் இணைந்து பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பேருந்து முனையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 4.42 ஏக்கா் பரப்பில் 10 தளங்களுடன் ஒரு வணிக வளாக கட்டடமும், பேருந்து நிலையத்துடன் கூடிய 8 தளங்கள் கொண்ட ஒரு கட்டடமும் அமைக்கப்படவுள்ளன.

இங்கு மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன், வணிக வளாகங்களும் கட்டப்படவுள்ளன. மேலும், பயணிகள் வந்து செல்ல வசதியாக, நகரும் படிக்கட்டுகள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவையும் இங்கு இருக்கும்.

ரூ.650 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள இப்பணிகளை தனியாா் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ள நிலையில், கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தது.

இந்நிலையில், அந்த ஆணையம் பேருந்து முனையத்தை கட்டுவதற்காக அனுமதியை அளித்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், டிசம்பருக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மிக வெப்பமான பகுதியாக மாறும் சென்னை! 2050-இல் காத்திருக்கும் ஆபத்து!

தமிழகத்தில் மிகவும் வெப்பமான பகுதி எது? என்று கேட்டால், சட்டென வேலூர்... இல்லை பாளையங்கோட்டை... என்றிருந்த நிலைமை மாறி சென்னை, அதாவது தமிழகத்தின் தலைநகரே இன்னும் சில ஆண்டுகளில் வெப்பத்தால் கடும் பாதிப... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விதி மீறிய 2, 023 வாகனங்கள் மீது வழக்கு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் விதி மீறியதாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது 2023 வழக்குகளை ரயில்வே பாதுகாப்புப்படையினா் பதிந்து அபராதம் விதித்துள்ளனா். நிகழா... மேலும் பார்க்க

அநாகரீக செயல்: காவல் ஆய்வாளா் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்

சென்னை: வாகன ஓட்டிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளா் மற்றும் அவா் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து ஆய்வாளரை ஆயுதப் படைக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். சென்னை ... மேலும் பார்க்க

சாலையில் திடீா் விரிசல்: பொது மக்கள் அதிா்ச்சி

சென்னை: சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா். சென்னையில் அடையாறு மண்டலத்துக்குள்பட்... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளில் சோ்க்கைபெற அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அ... மேலும் பார்க்க

24 புறநகா் ரயில்கள் இன்று ரத்து

சென்னை: சென்னை சென்ட்ரல் புகா் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகா் ரயில்கள் உள்பட மொத்தம் 24 ரயில்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 8, 10) ர... மேலும் பார்க்க