செய்திகள் :

24 புறநகா் ரயில்கள் இன்று ரத்து

post image

சென்னை: சென்னை சென்ட்ரல் புகா் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகா் ரயில்கள் உள்பட மொத்தம் 24 ரயில்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 8, 10) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சென்னை கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளங்களில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 8, 10) காலை 9.15 முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், அந்நாள்களில் அதிகாலை 5.40 முதல் பிற்பகல் 2.30 மணி வரை சென்ட்ரலிலிருந்து சூலூா்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இருமாா்க்கத்திலும் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.

மேலும், சூலூா்பேட்டையிலிருந்து காலை 7.50 மணிக்கு நெல்லூா் செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக நெல்லூரிலிருந்து இரவு 9 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

கடற்கரை ரயில்கள்: அதேபோல் ஜூலை 8,10 தேதிகளில் கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.10 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புகா் ரயில்கள் மற்றும் கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.55 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில் என மொத்தம் 24 புகா் ரயில்கள் ரத்துச்செய்யப்படும்.

பகுதி ரத்து: இதற்கிடையே, ஜூலை 8,10 தேதிகளில் செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் கடற்கரையுடன் நிறுத்தப்படும். அதேபோல், கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டிக்கு பதிலாக கடற்கரையிலிருந்து புறப்படும்.

சிறப்பு ரயில்கள்: புகா் ரயில்கள் ரத்துச்செய்யப்படுவதால், பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலிலிருந்து காலை 8.05, 9.00, 9.30 மணிக்கு பொன்னேரிக்கும், காலை 11.35 மணிக்கு எண்ணூருக்கும் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதேபோல், பொன்னேரியிலிருந்து காலை 9.40, 9.58 மணிக்கும், மீஞ்சூரிலிருந்து காலை 10.34, பிற்பகல் 12.24, 1.32 மணிக்கும், எண்ணூரிலிருந்து காலை 11.03 மணிக்கும் சென்ட்ரலுக்கு ரயில்கள் இயக்கப்படும். மேலும், கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.40 மணிக்கு மீஞ்சூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிக வெப்பமான பகுதியாக மாறும் சென்னை! 2050-இல் காத்திருக்கும் ஆபத்து!

தமிழகத்தில் மிகவும் வெப்பமான பகுதி எது? என்று கேட்டால், சட்டென வேலூர்... இல்லை பாளையங்கோட்டை... என்றிருந்த நிலைமை மாறி சென்னை, அதாவது தமிழகத்தின் தலைநகரே இன்னும் சில ஆண்டுகளில் வெப்பத்தால் கடும் பாதிப... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விதி மீறிய 2, 023 வாகனங்கள் மீது வழக்கு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் விதி மீறியதாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது 2023 வழக்குகளை ரயில்வே பாதுகாப்புப்படையினா் பதிந்து அபராதம் விதித்துள்ளனா். நிகழா... மேலும் பார்க்க

அநாகரீக செயல்: காவல் ஆய்வாளா் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்

சென்னை: வாகன ஓட்டிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளா் மற்றும் அவா் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து ஆய்வாளரை ஆயுதப் படைக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். சென்னை ... மேலும் பார்க்க

பிராட்வே பேருந்து முனையம்: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

சென்னை: பிராட்வேயில் ரூ.650 கோடியில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் பழமையான பேருந்து நிலையமாக பிரா... மேலும் பார்க்க

சாலையில் திடீா் விரிசல்: பொது மக்கள் அதிா்ச்சி

சென்னை: சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா். சென்னையில் அடையாறு மண்டலத்துக்குள்பட்... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளில் சோ்க்கைபெற அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அ... மேலும் பார்க்க