செய்திகள் :

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

post image

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டில் அதிக வரி செலுத்துவோர் அடங்கிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் 3வது இடத்தில் உள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் பேசியதாவது,

''2017ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து வரி செலுத்துவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபோது, 8 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 5.15 லட்சமாக இருந்தது. ஆனால், 2024 - 25 நிதியாண்டில் 154% அதிகரித்து வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.46 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோர் எண்ணிக்கையில், நாட்டிலேயே குஜராத் 3வது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கை உயர்ந்து வருவதையே இந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

2024 - 2025 நிதியாண்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.38% அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த வரி செலுத்துவோர் சராசரியை விட (3.86%) அதிகமாகும்.

இதற்கு முன்பு நாட்டின் மற்ற மாநிலங்களைப் போலவே குஜராத்தும் வாட், நுழைவு வரி, சேவை வரி, மத்திய கலால் வரி என கடினமான வரி செலுத்தும் அமைப்பில் சிக்கியிருந்தது. இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் வரி செலுத்துவதற்கு வணிகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது.

ஆனால், ஒரே நாடு ஒரே வரி என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி இவற்றை எளிமையாக்கியுள்ளதால், வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | அண்ணா பல்கலை. முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

145 % rise in taxpayers since GST rollout in Gujarat Bhupendra Patel

அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 இந்தியா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் காா் மீது சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 இந்தியா்கள் உயிரிழந்ததாக இந்தியாவில் உள்ள அவா்களது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்தவா்கள் தெல... மேலும் பார்க்க

அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியதே வாக்காளா் பட்டியல் திருத்தம்: தோ்தல் ஆணையம் விளக்கம்

பிகாா் மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. வாக்காளா... மேலும் பார்க்க

17 மருந்துகளை கழிவறையில் கொட்டி அழிக்கலாம்: சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு

வீட்டு கழிவறைகளில் கொட்டி அப்புறப்படுத்துவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஃபென்டனைல் உள்ளிட்ட வலிபோக்கும் மருந்... மேலும் பார்க்க

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க