செய்திகள் :

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய அரசு அல்லது விமானப் படை தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில், எரிக் டிராப்பியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலின்போது, மூன்று ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரஃபேல் போா் விமானங்களை தயாரிக்கும் பிரெஞ்சு நிறுவனமான டஸால்ட் நிறுவன சிஇஓ எரிக் டிராப்பியா் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

சீனாவின் ஜெட் விமானங்கள் மீதான உலக நாடுகளின் நன்மதிப்பை உயர்த்தும் நோக்கத்தில், ரஃபேல் விமானங்களின் திறன் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்படுவதாகவும் டிராப்பியர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்று எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விமானத்தின் தோல்வியானது, 12,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்றும், அதில் எதிரிகளின் ஈடுபாடோ அல்லது விரோதமான ரேடார் தொடர்புகளோ இல்லை எனவும் பிரெஞ்சு இணையதள செய்தி நிறுவனத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை மேற்கோள் காட்டி டிராப்பியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பின்னணியில் சீனா?

பிரான்ஸ் நாட்டிற்குச் சொந்தமான ரஃபேல் போர் விமானங்களின் உலகளாவிய நற்பெயரையும், விற்பனையையும் சிதைக்க திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பும் முயற்சியில் சீனா ஈடுபட்டதாக பிரான்ஸ் ராணுவம் மற்றும் உளவுத்துறை கூறுகிறது.

உலக நாடுகள் ரஃபேல் விமானங்களை வாங்குவதைத் தடுக்கவும், அதற்குப் பதிலாக சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களை வாங்குவதை ஊக்குவிக்கவும் சீனா இப்படி செய்ததாக, பிரான்ஸ் உளவுத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்தியா உத்தரவிட்டது: எக்ஸ்

One IAF Rafale lost, but not shot by Pakistan says Dassault CEO Eric Trappier 

குடியரசுத் தலைவருக்கு எதிராக ஆட்சேபகர வார்த்தைகள்: கார்கே மீது பாஜக குற்றச்சாட்டு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்ட... மேலும் பார்க்க

அரசு நிர்வாகத் தலையீடு இல்லாத நீதித்துறையே அம்பேத்கரின் விருப்பம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்று அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர் விரும்பியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பு: இந்தியா வெற்றிகர சோதனை

நீண்ட தூர இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடிய நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது. லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான கவராட்டியில் ஜூன் 23 மு... மேலும் பார்க்க

விமான கட்டண திடீா் உயா்வு பிரச்னை: தீா்வு காண நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் டிஜிசிஏ உறுதி

விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படும் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்ககம் (டிஜிசிஏ) உறுதி அளித்தது. மகா ... மேலும் பார்க்க

இணையவழி பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத நிதிமாற்றத்துக்கு பயன்படுத்தும் அபாயம் - சா்வதேச அமைப்பு எச்சரிக்கை

இணையவழி வா்த்தக மற்றும் பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத அமைப்புகள் தங்களுடைய பணப்பரிமாற்றுத்துக்காக தவறாக பயன்படுத்துப்படுவதாக உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பு (எஃப்.ஏ.டி.எஃப்) எச்சரித்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு மேற்கு வங்கத்தில் இருவா் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடைய இருவரை மேற்கு வங்கத்தின் கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா். இவா்களில் ஒருவா் கொல்கத்தாவின் பவானிபூா் பகுத... மேலும் பார்க்க