செய்திகள் :

அரசு நிர்வாகத் தலையீடு இல்லாத நீதித்துறையே அம்பேத்கரின் விருப்பம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

post image

அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்று அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர் விரும்பியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நீதிபதி பி.ஆர்.கவாய், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றதைப் பாராட்டும் வகையில் அந்த மாநில சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியதாவது:

அமைதிக் காலத்திலும், போர்ச் சூழலிலும் நாட்டை அரசியல் சாசனத்தின் மேன்மை ஒற்றுமையுடன் வைத்திருக்கும். சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித் துறை ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் அரசியல் சாசனம் உரிமைகளை வழங்கியுள்ளது.

குடிமக்களின் உரிமைகளைக் காக்கும் அரணாக நீதித் துறை செயல்பட வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார். அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார் என்று கவாய் பேசினார். முன்னாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக கவாய் பதவியேற்றதற்கு மகாராஷ்டிர சட்டப் பேரவையும், சட்ட மேலவையும் வாழ்த்து தெரிவித்தன. சட்டப் பேரவையின் சார்பில் அவரை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டிப் பேசினார்.

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.வடமேற்கு பாக... மேலும் பார்க்க

ரூ.50 நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் மறுப்பு!

ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் வி... மேலும் பார்க்க

அருணாசலில் யானை தாக்கி முன்னாள் எம்எல்ஏ பலி!

அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார். திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (... மேலும் பார்க்க

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹி... மேலும் பார்க்க

ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இய... மேலும் பார்க்க