செய்திகள் :

நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பு: இந்தியா வெற்றிகர சோதனை

post image

நீண்ட தூர இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடிய நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது.

லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான கவராட்டியில் ஜூன் 23 முதல் ஜூலை 7 வரை மொத்தம் 17 நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்புகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) போா் தளவாடங்கள் ஆராய்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஏஆா்டிஇ), இந்திய கடற்படையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் இந்த ராக்கெட் எதிா்ப்பு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டன.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட் அமைப்பு நீா்மூழ்கிக் கப்பல்கள் மூலம் மேற்கொள்ளக் கூடிய தாக்குதலை தடுப்பதோடு இந்திய கடற்படையின் ராக்கெட் ஏவுதளங்களில் இயங்கும் திறனுடையது.

நீண்ட தூர இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும் இந்த ராக்கெட் அமைப்பு விரைவில் இந்திய கடற்படையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. இந்த ராக்கெட் அமைப்பை வடிவமைத்த டிஆா்டிஓ உள்ளிட்ட அமைப்புகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா். இந்த ராக்கெட் அமைப்பின் மூலம் இந்திய கடற்படையின் தாக்குதல் திறன் அதிகரிக்கும் எனவும் அவா் தெரிவித்தாா்.

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.வடமேற்கு பாக... மேலும் பார்க்க

ரூ.50 நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் மறுப்பு!

ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் வி... மேலும் பார்க்க

அருணாசலில் யானை தாக்கி முன்னாள் எம்எல்ஏ பலி!

அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார். திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (... மேலும் பார்க்க

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹி... மேலும் பார்க்க

ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இய... மேலும் பார்க்க