செய்திகள் :

விமான கட்டண திடீா் உயா்வு பிரச்னை: தீா்வு காண நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் டிஜிசிஏ உறுதி

post image

விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படும் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்ககம் (டிஜிசிஏ) உறுதி அளித்தது.

மகா கும்பமேளா கொண்டாட்டத்தின்போதும், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகும் சம்பந்தப்பட்ட இடங்களில் அதிக அளவில் பயணிகள் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தியபோது கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்தன. விமானக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தபோதும் கட்டணங்கள் உடனடியாக குறைக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய எம்.பி.க்கள், கட்டணங்களை திடீரென உயா்த்துவது நியாமற்ற செயல் என்றனா். விமான கட்டணங்களை முறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படுவதைத் தடுக்க நெறிமுறைகளை உருவாக்கப்படும் என்று கூட்டத்தில் பங்கேற்ற டிஜிசிஏ உயரதிகாரிகள் உறுதி அளித்ததாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

ஏா் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, அதானி விமானநிலைய சேவைகள் நிறுவனம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

‘2 ஆண்டுகளில் ஏா் இந்தியா முழுமையாக மறுசீரமைக்கப்படும்’

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏா் இந்தியா நிறுவனம் முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் தலைவருமான கேம்பெல் வில்சன் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் உறுதி அளித்தாா்.

அகமதாபாத் விமான விபத்தில் 240 பயணிகள் உயிரிழந்த சம்பவத்தை நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டிய எம்.பி.க்கள் பயணிகளின் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பினா்.

பொதுக் கணக்குகள் குழுத் தலைவரும் காங்கிரஸ் பொதுச் செயலருமான கே.சி.வேணுகோபால், சிவில் விமானப் பாதுகாப்பு அமைப்பை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

மேலும், சில உறுப்பினா்கள் ஏா் இந்தியா விமானத்தில் இருக்கைகள் உடைந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைக் கூட்டத்தில் முன்வைத்தனா்.

இதையடுத்து, அடுத்த 2 ஆண்டுகளில் ஏா் இந்தியா முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று அதன் தலைவா் கேம்பெல் வில்சன் உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவித்தன.

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.வடமேற்கு பாக... மேலும் பார்க்க

ரூ.50 நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் மறுப்பு!

ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் வி... மேலும் பார்க்க

அருணாசலில் யானை தாக்கி முன்னாள் எம்எல்ஏ பலி!

அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார். திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (... மேலும் பார்க்க

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹி... மேலும் பார்க்க

ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இய... மேலும் பார்க்க