செய்திகள் :

குடியரசுத் தலைவருக்கு எதிராக ஆட்சேபகர வார்த்தைகள்: கார்கே மீது பாஜக குற்றச்சாட்டு

post image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் பெயர்களை தவறாக உச்சரித்தார்.

அவர் பேசுகையில் "திரௌபதி முர்முவையும் ராம்நாத் கோவிந்தையும் நாட்டின் குடியரசுத் தலைவராக்கியது பற்றியே பாஜக எப்போதும் பேசிவருகிறது. நமது சொத்துகள், காடுகள், நிலம் மற்றும் நீர் ஆகியவற்றைப் பறிப்பதற்காக அக்கட்சி இதைச் செய்ததா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், கார்கேவின் பேச்சு தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, புது தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியுள்ளார்.

இது காங்கிரஸின் மரபணுவில் தலித் விரோத, ஆதிவாசி விரோத, அரசியல் சாசன விரோத மனப்போக்கு கலந்திருப்பதைக் காட்டுகிறது.

ராம்நாத் கோவிந்தை கோவிட் என்று கார்கே தனது உரையில் குறிப்பிட்டார். திரௌபதி முர்முவை முர்மா என்று அவர் உச்சரித்தார்.

மேலும் குடியரசுத் தலைவரை நில மாஃபியா என்றும் கார்கே குறிப்பிட்டார். சொத்துகளையும், காடுகளையும் மக்களிடம் இருந்து பறிப்பதற்காகவே திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரானதாகவும் அவர் தெரிவித்தார்.

திரௌபதி முர்முவுக்கும், ராம்நாத் கோவிந்துக்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கண்ட இரு தலைவர்களை அவமதித்தது மட்டுமின்றி ஆதிவாசி மற்றும் தலித் சமூகத்தினரின் உணர்வுகளையும் கார்கே காயப்படுத்தியுள்ளார்.

கார்கே தெரிவித்த கருத்துகளுக்காக காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும். மல்லிகார்ஜுன கார்கே கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக அக்கட்சித் தொண்டர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

காங்கிரஸும் கார்கேயும் மன்னிப்பு கேட்காவிட்டால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். அது காங்கிரஸை பாதிக்கும்.

காங்கிரஸ் கட்சியில் ரிமோட் கன்ட்ரோல் சாதனத்தால் இயக்கப்படும் தலைவராக கார்கே இருக்கிறார். ராகுல் காந்தியின் தூண்டுதலின்பேரில் அவர் ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். கார்கேவையும் காங்கிரஸையும் ஒட்டுமொத்த இந்தியா, ஆதிவாசி மற்றும் தலித் சமூகங்கள் ஆகியவை கண்டிக்கின்றன என்றார் அவர்.

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.வடமேற்கு பாக... மேலும் பார்க்க

ரூ.50 நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் மறுப்பு!

ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் வி... மேலும் பார்க்க

அருணாசலில் யானை தாக்கி முன்னாள் எம்எல்ஏ பலி!

அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார். திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (... மேலும் பார்க்க

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹி... மேலும் பார்க்க

ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இய... மேலும் பார்க்க