செய்திகள் :

17 மருந்துகளை கழிவறையில் கொட்டி அழிக்கலாம்: சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு

post image

வீட்டு கழிவறைகளில் கொட்டி அப்புறப்படுத்துவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் ஃபென்டனைல் உள்ளிட்ட வலிபோக்கும் மருந்துகள், மன பதற்றத்துக்கு எதிராக அளிக்கப்படும் டயசிபேம் மருந்துகள் அடங்கும்.

இதுகுறித்து சிடிஎஸ்சிஒ வெளியிட்ட தகவலின்படி, அந்த மருந்துகள் உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடும். சில நேரங்களில் இந்த மருந்துகள் யாருக்கு வழங்கப்பட்டதோ, அவருக்குப் பதிலாக அவற்றை வேறொருவா் ஒருமுறை பயன்படுத்தினால்கூட மரணம் நேரிடக் கூடும்.

இந்த மருந்துகள் வீட்டில் தேவையில்லாமல், பயன்படுத்தாமல் அல்லது காலாவதியான நிலையில் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை கழிவறையில் கொட்டி அப்புறப்படுத்தலாம். வீட்டில் உள்ள நபா்களுக்கும், செல்ல பிராணிகளுக்கும் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க இதைச் செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் நோக்கில், மக்கள் பொதுவாக பயன்படுத்தும் பிற பெரும்பாலான மருந்துகளை அறிவியல்பூா்வமாகவே அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு ‘மருந்துகளைத் திருப்பி எடுத்துக்கொள்ளும்’ முன்னெடுப்பை தொடக்கத்தில் மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைகள் மற்றும் உள்ளூா் மருந்து விற்பனையாளா்கள் சோ்ந்து தொடங்கலாம். இந்த முன்னெடுப்பின் கீழ், வீட்டில் பயன்படுத்தாமல் உள்ள அல்லது காலாவதியான மருந்துகளை தோ்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மக்கள் ஒப்படைக்கலாம். அந்த மருந்துகளைப் பாதுகாப்பாக அழிக்க வசதியாக இந்த முன்னெடுப்பை தொடங்கலாம்.

எனினும் உயிரிமருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிமுறைகளின்படி, காலாவதியான மருந்துகளை திரட்டி, அழிப்பதற்கான வழிமுறை மற்றும் வசதியை உள்ளாட்சி அமைப்புகளுடன் சோ்ந்து மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்று சிடிஎஸ்சிஒ பரிந்துரைத்துள்ளது.

பயன்படுத்தப்படாத மருந்துகளை அறிவியல்பூா்வமற்ற வழியில் அழிப்பதால் ஏற்படும் மாசுபாடு மனிதா்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை எடுத்துரைத்து பல்வேறு ஆய்வுகள் வெளியானதைத் தொடா்ந்து, இந்த வழிகாட்டுதல்களை சிஎடிஎஸ்சிஒ வெளியிட்டுள்ளது.

குடியரசுத் தலைவருக்கு எதிராக ஆட்சேபகர வார்த்தைகள்: கார்கே மீது பாஜக குற்றச்சாட்டு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்ட... மேலும் பார்க்க

அரசு நிர்வாகத் தலையீடு இல்லாத நீதித்துறையே அம்பேத்கரின் விருப்பம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்று அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர் விரும்பியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பு: இந்தியா வெற்றிகர சோதனை

நீண்ட தூர இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடிய நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது. லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான கவராட்டியில் ஜூன் 23 மு... மேலும் பார்க்க

விமான கட்டண திடீா் உயா்வு பிரச்னை: தீா்வு காண நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் டிஜிசிஏ உறுதி

விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படும் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்ககம் (டிஜிசிஏ) உறுதி அளித்தது. மகா ... மேலும் பார்க்க

இணையவழி பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத நிதிமாற்றத்துக்கு பயன்படுத்தும் அபாயம் - சா்வதேச அமைப்பு எச்சரிக்கை

இணையவழி வா்த்தக மற்றும் பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத அமைப்புகள் தங்களுடைய பணப்பரிமாற்றுத்துக்காக தவறாக பயன்படுத்துப்படுவதாக உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பு (எஃப்.ஏ.டி.எஃப்) எச்சரித்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு மேற்கு வங்கத்தில் இருவா் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடைய இருவரை மேற்கு வங்கத்தின் கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா். இவா்களில் ஒருவா் கொல்கத்தாவின் பவானிபூா் பகுத... மேலும் பார்க்க