செய்திகள் :

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 9% சரிவு!

post image

புதுதில்லி: டாடா மோட்டார்ஸின் ஜூன் காலாண்டு மொத்த உலகளாவிய விற்பனை 9 சதவிகிதம் சரிந்து 2,99,664 யூனிட்களாக இருப்பதாக டாடா மோட்டார்ஸ் இன்று தெரிவித்தது.

இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனம் 3,29,847 யூனிட்களை விற்பனை செய்தது.

முதல் காலாண்டில் பயணிகள் வாகனங்களின் உலகளாவிய மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 10 சதவிகிதம் சரிந்து 1,24,809 யூனிட்களாக உள்ளது என்றது டாடா மோட்டார்ஸ்.

அதே வேளையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ஏற்றுமதி 87,286 யூனிட்களாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட 11 சதவிகிதம் சரிவு என்றது.

2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் டாடா மோட்டார்ஸின் அனைத்து வணிக வாகனங்களின் உலகளாவிய மொத்த விற்பனை மற்றும் டாடா டேவூ உள்ளிட்ட வாகனங்கள் வரிசையில் சுமார் 87,569 யூனிட்களாக உள்ளது. இது 2025ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டை விட 6 சதவிகிதம் சரிவு.

டாடா மோட்டார்ஸ் பங்குகள் 0.64 சதவிகிதம் உயர்ந்து பிஎஸ்இ-யில் ரூ.693.25 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக முடிவு!

Tata Motors reported a 9 per cent dip in total global sales to 2,99,664 units in the June quarter.

ஆப்பிள் ஐபோன் 17 குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறதா? விலை எவ்வளவு?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஐபோன்-17 இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறதா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கான விடை ‘எஸ்’ என்றுதான் சொல்லியாக வேண்டும். ஐபோன் 17... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 3 போன்களுக்கு சார்ஜ் செய்யலாம்! ஷாவ்மியின் புதிய பவர் பேங்க்!

ஷாவ்மி நிறுவனம் புதிதாக பவர் பங்க் ஒன்றை ஜூலை 10ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதில், ஒரே நேரத்தில் மூன்று ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யலாம். இதனால், கூட்டுக் குடும்பமாக அல்லது நண்பர்களுடன் குழுவாகப் ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக முடிவு!

மும்பை: உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பலவீனமான டாலரின் பின்னணியில் இன்றைய அந்நிய செலவானி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவடைந்தது.அந்... மேலும் பார்க்க

ஒன்பிளஸ் நோர்டு 5 விற்பனையில் தாமதம் ஏன்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான நோர்டு 5 நாளை (ஜூலை 9) இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனுடன் மற்றொரு தயாரிப்பான ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்... மேலும் பார்க்க

ஏற்றம் கண்ட வங்கி பங்குகள்; சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து முடிவு!

மும்பை: வங்கி மற்றும் குறிப்பிட்ட ஐடி பங்குகள் முதலீட்டாளர்கள் வாங்கியதன் காரணமாகவும், ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்குகளாலும் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 270 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்... மேலும் பார்க்க

தரமான கேமரா, சக்திவாய்ந்த புராசஸர்... ஒன்பிளஸ்ஸின் புதிய ஸ்மார்ட்போன்கள்!

ஒன்பிளஸ் நார்டு 5 மற்றும் ஒன்பிளஸ் நார்டு சிஇ 5 ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. ஒன்பிளஸ் அறிவிப்பின்படி, இன்று (ஜூலை 8) 2 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின. நாளை முதல் இந்த ஸ்மார்ட்ப... மேலும் பார்க்க