செய்திகள் :

ஒரே நேரத்தில் 3 போன்களுக்கு சார்ஜ் செய்யலாம்! ஷாவ்மியின் புதிய பவர் பேங்க்!

post image

ஷாவ்மி நிறுவனம் புதிதாக பவர் பங்க் ஒன்றை ஜூலை 10ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதில், ஒரே நேரத்தில் மூன்று ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யலாம்.

இதனால், கூட்டுக் குடும்பமாக அல்லது நண்பர்களுடன் குழுவாகப் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு இந்த பவர் பேங்க் பயனுள்ளதாக இருக்கும் என ஷாவ்மி குறிப்பிடுகிறது.

பவர் பேங்க் பயன்படுத்துவோர் பலரின் பொதுவான கோரிக்கை, அதன் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதே. இதனைக் கருத்தில் கொண்டு இந்த புதிய பவர் பேங்கில் 20000mAh திறன் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடுமட்டுமின்றி 22.5W வேகமாக சார்ஜ் செய்யும் திறன் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், ஒரே நேரத்தில் மூன்று ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்தாலும், மேலும் சிலமுறை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்

  • பவர் பேங்கில் யூஎஸ்பி - சி கேபிள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து வகையான ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், இயட்பட்ஸ் போன்ற பிற சாதனங்களுக்கும் சார்ஜ் செய்துகொள்ளலாம். ஸ்மார்ட்போன்களுக்கான சார்ஜரிலேயே பவர் பேங்கிற்கும் சார்ஜ் செய்துகொள்ளலாம். கூடுதல் வயர்கள் தேவைப்படாது.

  • 20000mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 22.5W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • பயன்படுத்துவதற்கு மிகுந்த பாதுகாப்பானது. 12 அடுக்கு பாதுகாப்பு உடையது. இதனால், அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு குறைவு.

  • ஒரே நேரத்தில் 3 மின்னணு சாதனங்களுக்கு சார்ஜ் செய்யலாம்.

  • இளம் பச்சை மற்றும் கருப்பு ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.

  • இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ. 1,799.

இதையும் படிக்க | தரமான கேமரா, சக்திவாய்ந்த புராசஸர்... ஒன்பிளஸ்ஸின் புதிய ஸ்மார்ட்போன்கள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 9% சரிவு!

புதுதில்லி: டாடா மோட்டார்ஸின் ஜூன் காலாண்டு மொத்த உலகளாவிய விற்பனை 9 சதவிகிதம் சரிந்து 2,99,664 யூனிட்களாக இருப்பதாக டாடா மோட்டார்ஸ் இன்று தெரிவித்தது.இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 17 குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறதா? விலை எவ்வளவு?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஐபோன்-17 இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறதா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கான விடை ‘எஸ்’ என்றுதான் சொல்லியாக வேண்டும். ஐபோன் 17... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக முடிவு!

மும்பை: உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பலவீனமான டாலரின் பின்னணியில் இன்றைய அந்நிய செலவானி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவடைந்தது.அந்... மேலும் பார்க்க

ஒன்பிளஸ் நோர்டு 5 விற்பனையில் தாமதம் ஏன்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான நோர்டு 5 நாளை (ஜூலை 9) இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனுடன் மற்றொரு தயாரிப்பான ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்... மேலும் பார்க்க

ஏற்றம் கண்ட வங்கி பங்குகள்; சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து முடிவு!

மும்பை: வங்கி மற்றும் குறிப்பிட்ட ஐடி பங்குகள் முதலீட்டாளர்கள் வாங்கியதன் காரணமாகவும், ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்குகளாலும் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 270 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்... மேலும் பார்க்க

தரமான கேமரா, சக்திவாய்ந்த புராசஸர்... ஒன்பிளஸ்ஸின் புதிய ஸ்மார்ட்போன்கள்!

ஒன்பிளஸ் நார்டு 5 மற்றும் ஒன்பிளஸ் நார்டு சிஇ 5 ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. ஒன்பிளஸ் அறிவிப்பின்படி, இன்று (ஜூலை 8) 2 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின. நாளை முதல் இந்த ஸ்மார்ட்ப... மேலும் பார்க்க