செய்திகள் :

கரூர்: ``என் குரல் பெண் குரல்போல இருப்பதால், பாலியல் சீண்டல் செய்கிறார் ஆசிரியர்'' - மாணவர் புகார்

post image

கரூரில் பெண் குரல் போல இருக்கும் மாணவரை பள்ளி ஆசிரியர் கிண்டல் செய்து பாலியல் சீண்டல் செய்வதாக பாதிக்கப்பட்ட அம்மாணவர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருக்கிறார்.

10-ம் வகுப்பு படிக்கும் மாணவர், தனது குரல் பெண் குரல் போல இருப்பதால் கரூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கும் செந்தில்குமார், கிண்டல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாகும்படி பேசுவதாகவும், பாலியல் சீண்டல் செய்வதாகவும் மிகுந்த வருத்தத்துடன் பேட்டியும் அளித்திருக்கிறார்.

கரூர்

இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் மாணவர், "என் குரல் பெண் குரல்போல இருப்பதால் என் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கும் செந்தில்குமார் வகுப்பில், பள்ளியில் எல்லோர் முன்பும் மன உளைச்சலுக்கு ஆளாகும்படி கிண்டல் செய்கிறார், தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் சீண்டலும் செய்கிறார், ஆபாசமாக பேசுகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலடைந்திருக்கிறேன். எனக்குப் படிக்க ரொம்ப ஆசை. ஆனால், இந்த மன உளைச்சலால் கடந்த 6 நாள்களாகப் பள்ளிக்குச் செல்லவில்லை.

இதுபோன்ற ஆசியர்களை சும்மாவிடக்கூடாது. இதில் கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற ஆசிரியர்கள் உருவாக மாட்டார்கள். பாலினம், பாலியல் ரீதியாக மாணவர்களை துன்புறுத்தும் ஆசியர்களுக்கு இது பாடமாக இருக்கும்.

அரசு இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலினம், பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் இனி எங்கும் நடக்கக் கூடாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் தெரிவித்துப் பேசியிருக்கிறார் பாதிக்கப்பட்ட மாணவர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Andhra: ``அவர்க்கு பைத்தியம் பிடிச்சிருச்சு'' - பவன் கல்யாண் மீது முன்னாள் அமைச்சர் ரோஜா காட்டம்

ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஆந்திர முன்னாள் அமைச்சராக இருந்தவர் ரோஜா. கடந்த 2024 ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசக் கட்சி ஆட்... மேலும் பார்க்க

``ஆட்சியாளர்களுக்கு பயம்; காவல்துறையை ஏவி எங்களை தடுக்கின்றனர்..’’ - கொந்தளிக்கும் வேலூர் அதிமுக

வேலூரில், `கடந்த ஜூன் 25-ம் தேதி முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட அரசு பென்ட்லேண்ட் பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை’ எனக் குற்றம்சாட்டி, வேலூர் அண்ணா கலையரங்கம் அர... மேலும் பார்க்க

20 பாட்டில் விஷ முறிவு மருந்து; 72 மணி நேர போராட்டம்-11 வயது சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பட்லுார், சொக்கநாத மணியூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர். இவரது மகன் ஜெயசூர்ய குமார் (11).அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூன் 26-ஆம் ... மேலும் பார்க்க

சென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவு; அச்சத்தில் மக்கள் - ஸ்பாட் விசிட்

சென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெரு... மேலும் பார்க்க

வேலூர்: `அது, ஜி.ஹெச் இல்லை... வெற்றுக் கட்டடம்’ - கொதிக்கும் அதிமுக; மறுக்கும் திமுக

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில், ரூ. 197.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஏழு தளங்களுடன்கூடிய பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனைக் கட்டடம் பிரமாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ... மேலும் பார்க்க

மும்பை அருகே கடலில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு மாயம்: தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள்

நேற்று இரவு மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் அருகில் ரேவ்தந்தா என்ற இடத்தில் பாகிஸ்தான் கப்பல் ஒன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. இதனை இந்திய கடற்படையினர் ரேடார் மூலம் கண்டுபிடித்தனர். இதையடுத்த... மேலும் பார்க்க