செய்திகள் :

20 பாட்டில் விஷ முறிவு மருந்து; 72 மணி நேர போராட்டம்-11 வயது சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

post image

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பட்லுார், சொக்கநாத மணியூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர். இவரது மகன் ஜெயசூர்ய குமார் (11).அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூன் 26-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஜெயசூர்யகுமாரை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. இதையடுத்து, அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஜெயசூர்யகுமார் அனுமதிக்கப்பட்டார். பாம்பின் விஷம் அதிக வீரியமாக இருந்ததால், ஜெயசூர்யகுமார் சுய நினைவை இழந்தார். உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த ஜெயசூர்யகுமாருக்கு,விஷ முறிவு மருந்து வழங்கி, இரண்டு நாள்கள் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார். பின், 10 நாள்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், ஜெயசூர்யகுமார் முழுமையாக குணமடைந்தார்.

ஜெயசூர்யகுமார்

இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், ''கட்டுவிரியன் பாம்பு கடித்தால் கடும் வயிற்று வலி ஏற்பட்டு, நரம்பு மண்டலம் பாதித்து உயிரிழப்பு ஏற்படும். ஜெயசூர்யகுமாரை கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் சுயநினைவை இழந்தார். 20 பாட்டில் விஷ முறிவு மருந்து அவருக்கு வழங்கப்பட்டது. 72 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. 10 நாள்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் ஜெயசூர்யகுமார் தற்போது நல்ல உடல்நிலையில் உள்ளார்" என்றனர்.

கரூர்: ``என் குரல் பெண் குரல்போல இருப்பதால், பாலியல் சீண்டல் செய்கிறார் ஆசிரியர்'' - மாணவர் புகார்

கரூரில் பெண் குரல் போல இருக்கும் மாணவரை பள்ளி ஆசிரியர் கிண்டல் செய்து பாலியல் சீண்டல் செய்வதாக பாதிக்கப்பட்ட அம்மாணவர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருக்கிறார்.10-ம் வகுப்பு படிக்கும் மாணவர், தன... மேலும் பார்க்க

Andhra: ``அவர்க்கு பைத்தியம் பிடிச்சிருச்சு'' - பவன் கல்யாண் மீது முன்னாள் அமைச்சர் ரோஜா காட்டம்

ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஆந்திர முன்னாள் அமைச்சராக இருந்தவர் ரோஜா. கடந்த 2024 ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசக் கட்சி ஆட்... மேலும் பார்க்க

``ஆட்சியாளர்களுக்கு பயம்; காவல்துறையை ஏவி எங்களை தடுக்கின்றனர்..’’ - கொந்தளிக்கும் வேலூர் அதிமுக

வேலூரில், `கடந்த ஜூன் 25-ம் தேதி முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட அரசு பென்ட்லேண்ட் பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை’ எனக் குற்றம்சாட்டி, வேலூர் அண்ணா கலையரங்கம் அர... மேலும் பார்க்க

சென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவு; அச்சத்தில் மக்கள் - ஸ்பாட் விசிட்

சென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெரு... மேலும் பார்க்க

வேலூர்: `அது, ஜி.ஹெச் இல்லை... வெற்றுக் கட்டடம்’ - கொதிக்கும் அதிமுக; மறுக்கும் திமுக

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில், ரூ. 197.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஏழு தளங்களுடன்கூடிய பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனைக் கட்டடம் பிரமாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ... மேலும் பார்க்க

மும்பை அருகே கடலில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு மாயம்: தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள்

நேற்று இரவு மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் அருகில் ரேவ்தந்தா என்ற இடத்தில் பாகிஸ்தான் கப்பல் ஒன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. இதனை இந்திய கடற்படையினர் ரேடார் மூலம் கண்டுபிடித்தனர். இதையடுத்த... மேலும் பார்க்க