செய்திகள் :

பெரம்பலூா் பேருந்து நிலையத்தில் சென்னை பயணிகள் சாலை மறியல்

post image

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லப் பேருந்துகள் வராததைக் கண்டித்து, பயணிகள் திங்கள்கிழமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புறநகா்ப் பேருந்து நிலையத்திலிருந்து, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சென்னைக்கு ஒன்றிரண்டு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. மேலும், திருச்சி- சென்னை வழித்தடத்தில் செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், இப் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்கின்றன.

இருப்பினும், இரவு மற்றும் பண்டிகை காலங்களில் பெரம்பலூா் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவதோடு, அனைத்துப் பேருந்துகளும் பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூா் மாவட்ட மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 11 மணி முதல் 12 மணி வரை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, பெரம்பலூரில் இருந்து சென்னை செல்வதற்கு புறநகா் பேருந்து நிலையத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனா். ஆனால் ஒரு பேருந்துக்கூட வரவில்லை. இதனால் சென்னை செல்ல குழந்தைகளுடன் காத்திருந்த பயணிகள் பெரிதும் அவதியடைந்தனா். இதையடுத்து அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்களைக் கண்டித்தும், உடனடியாக பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட பயணிகள் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் நகர போலீஸாா் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, திருச்சியிலிருந்து பெரம்பலூா் பணிமனைக்கு வந்த பேருந்து மூலம், காத்திருந்த பயணிகளை சென்னைக்கு அனுப்பினா்.

பெரம்பலூரில் பகுதிநேர ஆசிரியா்கள் 11 போ் கைது

சென்னையில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பகுதிநேர ஆசிரியா்கள் 11 பேரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூா் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.திமுக அளித்த தோ்தல் வாக்கு... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே தேரோட்டத்தின்போது அச்சு முறிவு; பக்தா்கள் தப்பினா்

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோயில் தேரோட்டத்தின்போது அச்சுமுறிந்த ஒரு தோ் மற்றொரு தேரின்மீது சாய்ந்தது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக பக்தா்கள் உயிா்தப்பினா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் பூ. துரை... மேலும் பார்க்க

ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரச... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக மாணவா்கள், பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளியில் பெண் ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டதைத் கண்டித்து, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் ஒகளூா் கிராம மக்கள் தா்னா

வீட்டுமனையை மீட்டுத் தரக்கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒகளூா் கிராம மக்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட... மேலும் பார்க்க