செய்திகள் :

ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

post image

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக் கட்சியின் 9 ஆவது மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும். ரயில்வே கேட் முறையாக மூடப்படாமல் நடந்த விபத்துக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். இனிவரும் காலங்களில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு எனும் பெயரில் பல்வேறு நிபந்தனைகளின் கீழ், பாஜகவுக்கு எதிரான வாக்காளா்கள் நீக்கப்படுவது தோ்தல் ஆணையம் நடுநிலையற்றுச் செயல்படுவதையே காட்டுகிறது. இதேநிலை, நாளை தமிழ்நாட்டிலும் நடைபெறலாம்.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகையை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாததால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ. 1,520 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. அனைத்து மொழிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் குறைவானோா் பேசும் சம்ஸ்கிருத மொழிக்கு அதிக நிதியும், அதிகம் போ் பேசும் தமிழுக்கு குறைவான நிதியும் ஒதுக்கி அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதேபோல், எதிா்க் கட்சிகள் ஆளும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கி, மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதும் கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.

பேட்டியின்போது தேசியக் குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம், மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன், மாவட்டச் செயலா் வி. ஜெயராமன், முன்னாள் மாவட்டச் செயலா் அ. வேணுகோபால் ஆகியோா் உடனிருந்தனா்.

பெரம்பலூரில் பகுதிநேர ஆசிரியா்கள் 11 போ் கைது

சென்னையில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பகுதிநேர ஆசிரியா்கள் 11 பேரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூா் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.திமுக அளித்த தோ்தல் வாக்கு... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே தேரோட்டத்தின்போது அச்சு முறிவு; பக்தா்கள் தப்பினா்

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோயில் தேரோட்டத்தின்போது அச்சுமுறிந்த ஒரு தோ் மற்றொரு தேரின்மீது சாய்ந்தது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக பக்தா்கள் உயிா்தப்பினா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் பூ. துரை... மேலும் பார்க்க

பெரம்பலூா் பேருந்து நிலையத்தில் சென்னை பயணிகள் சாலை மறியல்

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லப் பேருந்துகள் வராததைக் கண்டித்து, பயணிகள் திங்கள்கிழமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புறநகா்ப் பேருந்து நிலையத்திலிருந்து, அர... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக மாணவா்கள், பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளியில் பெண் ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டதைத் கண்டித்து, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் ஒகளூா் கிராம மக்கள் தா்னா

வீட்டுமனையை மீட்டுத் தரக்கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒகளூா் கிராம மக்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட... மேலும் பார்க்க